வீடு / குடும்பம்

செல்வச் செழிப்பை ஈர்க்க உதவும் பச்சைக் கற்பூரம்!

எஸ்.விஜயலட்சுமி

செல்வச் செழிப்பை விரும்பாதவர் இந்த உலகில் பெரும்பாலும் யாருமே இருக்கவே முடியாது. செல்வச் செழிப்பைத் தரும் பண வரவுக்கு உதவுவதில் பச்சைக் கற்பூரம் பெரும் பங்கு வகிக்கிறது. அந்தப் பச்சைக் கற்பூரத்தைப் பயன்படுத்தி பண வரவை ஏற்படுத்தும் ஐந்து வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

நறுமணம் மிக்க இடங்களில் செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி வாசம் செய்கிறாள். வீட்டில் பச்சைக் கற்பூரம் இருந்தால் அந்த வீட்டில் செல்வம் செழிக்கும். வீண் செலவுகள் ஏற்படாது. அது மட்டுமின்றி பணத்தை ஈர்க்கும் சக்தியும் இதற்கு உண்டு.

1. தினமும் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றி வழிபட்டவுடன், பச்சைக் கற்பூரத்தில் சுவாமிக்கு ஆரத்தி எடுப்பது செல்வச் செழிப்பைத் தரும்.

2. பச்சைக் கற்பூரத்தை பூஜை அறையில் வைக்கும்போது மனதில் நேர்மறை எண்ணங்களைத் தூண்டும். சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாகக் கட்டி பூஜையறையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தால் வீட்டில் பணம் குறைவின்றி சேரும். மேலும், வீட்டில் எப்போதும் நிம்மதியும் நிலவும்.

3. பணம் வைக்கும் பெட்டி அல்லது லாக்கரில் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை ஒரு சிறிய பச்சைத் துணியில் முடிந்து வைத்தால், அது பண வரவை ஈர்த்துத் தரும்.

4. சிறிய பச்சைக் கற்பூரத் துண்டை, ஒரு காகிதத்தில் வைத்து மடித்து, அதை பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறைவின்றி இருந்து கொண்டே இருக்கும்.

5. வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபமேற்றி, அதில் ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரத்தையும் இரண்டு டைமன்ட் கற்கண்டுகளையும் போட்டு விளக்கேற்றினால், வீட்டில் எப்போதும் செல்வ வளம் நிறைந்திருக்கும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT