அமைச்சர் ஏ.வ.வேலு
அமைச்சர் ஏ.வ.வேலு  
செய்திகள்

உங்களுக்கு தேவையானதை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்! அமைச்சர் ஏ.வ.வேலு விளக்கம்!

கல்கி டெஸ்க்

தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக பொங்கல் தொகுப்பு பரிசாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பொங்கல் தொகுப்பில் கரும்பை அரசு வழங்கவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்கக் கோரி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் தொகுப்புடன் கரும்பு, பனை வெல்லம் வழங்க வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார் . அதே போன்று எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கரும்புவழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதற்க்கு ஏன் கரும்பு வழங்கவில்லை எனவும் , விவசாயிகளிடமிருந்து ஏன் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்யவில்லை என்றும் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

karumbu

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவா், பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார். கரும்பை கொடுத்தால் முக்கால் கரும்பு, ஒண்ணே கால் கரும்பு கொடுப்பதாகவும், முந்திரி பருப்பை கொடுத்தால் சிறிய முந்திரியாக இருப்பதாகவும்,வெல்லம் கொடுத்தால் ஒழுகுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

அதை உணர்ந்து தான் முதலமைச்சர் உங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று 1000 ரூபாய் பரிசு தொகையாக பொங்கலுக்கு அறிவித்துள்ளார். பொது மக்களுக்கு என்ன தேவையோ உங்களுக்கு தேவையானதை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள் என அமைச்சர் ஏ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT