செய்திகள்

மாநிலங்களவை எம்.பி. பதவி; காஷ்மீர் பழங்குடி நியமனம்!

கல்கி

நாட்டிலேயே முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரின் பழங்குடியினத்தவரான குர்ஜார் முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த குலாம் அலி என்பவரை மாநிலங்களவை நியமன எம்.பி.யாக மத்திய அரசு நியமித்துள்ளது பெரும் வரவேற்பை் பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து,அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இதில் சட்டப்பேரவையுடன் கூடிய காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பெரும்பான்மையாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த குர்ஜார், மக்கள் உள்ளனர். இந்நிலையில்,அப்பிரிவைச் சேர்ந்த குலாம் அலி என்பவரை மாநிலங்களவை எம்.பி-யாக பிஜேபி அரசு நியமனம் செய்துள்ளது.

-இதுகுறித்து  மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிட்டதாவது;

இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், காலியாக உள்ள மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு குலாம் அலியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் இந்த நியமனம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

விமர்சனம் - அரண்மனை 4 - இது 'பழைய பல்லவி பாடும்' பேய் இல்லை… அதுக்கும் மேல! 

சம்மரில் உங்க காரை பராமரிக்க நச்சுனு சில டிப்ஸ்! 

'ஸிர்கேவாலே பியாஸ்'ஸிலிருக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்!

ஏழைகளின் மலைப் பிரதேசம்... கல்வராயன் மலை..!

எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள சுஜாதா கூறிய எளிய வழிகள்!

SCROLL FOR NEXT