செய்திகள்

தமிழக பாஜகவில் அடுத்த விக்கெட் காலி!

கல்கி டெஸ்க்

மிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் சரியாக இல்லை எனக்கூறி அக்கட்சியின் மாநில பொருளாதாரப் பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு அந்தக் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாகக் கூறி இருக்கிறார். இதன் மூலம் தமிழக பாஜகவில் அடுத்த விக்கெட் ஒன்றும் பறிபோய் உள்ளது.

இது தொடர்பாக அவர் எழுதி இருக்கும் ராஜினாமா கடிதத்தில், 'மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு… நான் பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வருகிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூட தகுதி இல்லாத சிலரை நீங்களும் மரியாதைக்குரிய கேசவ விநாயகம் அவர்களும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்ப்பதாலும், கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதாலும் எந்தக் காலத்திலும் கட்சி வளராது.

அதற்கு மேல் நேர்மாறாக இங்கே அவர்களது சுய லாபத்திற்காகவும் மதம் சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டுக்குள் பலவிதமான சச்சரவுகளையும், மேலும் எங்களிடமும், தொண்டர்கள், நிர்வாகிகளிடமும் பணம் வசூலிக்க சொல்லியும், அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு விதவிதமான அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

ஜனநாயகத்துக்கு எதிராக எங்களை வற்புறுத்தி சில விஷயங்களையும் கோரிக்கைகளையும் செய்யச் சொல்கிறீர்கள். என்னைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சிக்கும் உங்களுக்கும் உண்மையாக வேலை பார்த்த திரு.நிர்மல் குமாரை போன்ற நிர்வாகிகளையும் பல இன்னல்களுக்கு ஆளாக்கியதோடு, கட்சி வேலையில் செயல்பட விடாமல் செய்தீர்கள்.

மேலும், ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகின்றனர். இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் கொள்ளவில்லை. மேலும் பொருளாதார பிரிவின் பிரச்னைகளை உங்களுக்கும் கட்சி அலுவலகத்துக்கும் நேரடியாகச் சொல்லியும் இதுவரை நீங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் நான் எனது பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.

இதற்கு முழு காரணமாக இருக்கும் பொருளாதார பிரிவின் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் நரசிங்க பெருமாள் இவர்களை எல்லோரையும் வழிநடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.அண்ணாமலை ஆகிய நீங்கள்தான். நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று குறிப்பிடுகிறேன்.

பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்தக் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது. இது ஊர்ஜிதமான உண்மை. இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இதற்கும் மேல் பாரதிய ஜனதா கட்சியில் என்னை அர்ப்பணித்தேன் என்றால் எனது உயிருக்கே பாதிப்பு வரும் என்று நினைத்து, இந்தக் கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக ராஜினாமா செய்கிறேன் நன்றி.' எனக் கூறி இருக்கிறார்.

ஆஸ்துமா - செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை!

Rice Keratin: இனி வீட்டிலேயே முடியை ஸ்ட்ரைட் செய்யலாம்!

கிரெடிட் கார்டை தேர்வு செய்யும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

சிறுவர் கதை - புது சைக்கிள்!

கோடைக்காலத்தில் சாப்பிட ஏற்ற பேயன் வாழைப்பழத்தின் நன்மைகள் தெரியுமா?

SCROLL FOR NEXT