ஸ்பெஷல்

சசிகலாவை பிஜேபி-யில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்: அண்ணாமலை!

கல்கி

பிஜேபி-யில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சி மேலிடமதான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்த்தால் அக்கட்சி வலுவடையும். அப்படி அதிமுக-வில் சேர்க்காத பட்சத்தில் சசிகலாவை பிஜேபியில் சேர்க்க முயற்சிப்போம் என்றார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் அவர் இன்று திருச்சி வந்தபோது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை கூறியதாவது:

பாஜகவுக்கு சசிகலா வந்தால் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. இந்த விஷயத்தில் தனி மனிதர்கள் யாரும் முடிவெடுக்க முடியாது. கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்.

-இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார். 

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

சிரஞ்சீவியாக உலகில் வாழும் ஏழு பேர் யார் தெரியுமா?

சிறுகதை – தத்து!

75 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த நியண்டர்தல் பெண்ணைப் பார்க்க வேண்டுமா? வாருங்கள்!

SCROLL FOR NEXT