ஸ்பெஷல்

அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை;  வட மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்!

கல்கி

நாட்டின் பல மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து அம்மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

நாட்டில் பல மாநிலங்களில் கோடையை முன்னிட்டு வெப்பம் அதிகரிக்துள்ளது. இந்நிலையில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் பல மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும். இதன் காரணமாக வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். குறிப்பாக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் ராஜ்கர்க் பகுதியில் 45.6 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவான நிலையில், வடமேற்கு இந்தியாவில் பல இடங்களில் 47 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT