மனிஷா ராம்தாஸ்  
விளையாட்டு

உலக பாரா பேட்மிண்டன் போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை! 

கல்கி டெஸ்க்

உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, ஜப்பான் டோக்கியோ நகரில் கடந்த அக்டோபர் 31-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. சுமார் 44 நாடுகளின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்திய அணியில்  38 பேர் கலந்து கொண்டனர்.

 இந்த உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மனிஷா ராம்தாஸ் தங்கம் வென்றார். அவருக்கு நேற்று சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மனிஷா ராம்தாஸ், தெரிவித்ததாவது;

 ‘’இந்த போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து 2024-ம் ஆண்டு பாரிஸில் நடக்க இருக்கும் பாரா பேட்மிண்டனில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளது.

அடுத்த வருடம் ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்வேன் என்று நம்புகிறேன். டோக்கியோ போட்டியின் இறுதியில் கொஞ்சம் கடினமாகவே இருந்தது. தமிழக அரசு ஊக்குவித்தால் இன்னும் அதிகளவில் வெற்றி பெறுவேன்’’ என அவர் தெரிவித்தார்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT