பணக்கஷ்டத்துக்கு இனி No சொல்லுங்க… இந்த 50-30-20 ஃபார்முலா உங்க வாழ்க்கையை மாத்தும்!

Money
Money
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

சம்பளம் கைக்கு வந்ததும், எப்படி செலவு செய்யறதுன்னு குழப்பமா இருக்கா? மாசம் முடியறதுக்குள்ள பணமெல்லாம் காலியாகிடுதா? அப்போ இந்த 50-30-20 ரூல் உங்களுக்கானதுதான். இந்த முறையை நீங்க பின்பற்றினா, பணத்தை எப்படி சரியா நிர்வகிக்கிறதுன்னு புரிஞ்சுக்கலாம். இந்த 50-30-20 விதி, உங்க மாசச் சம்பளத்தை மூணு பகுதியா பிரிச்சு செலவு செய்யணும்னு சொல்லுது.

1. 50% - தேவைகளுக்காக (Needs): உங்க சம்பளத்துல 50% அத்தியாவசியமான தேவைகளுக்காக ஒதுக்கணும். தேவைகள்னா என்ன? வாடகை, வீட்டுக்கடன் தவணை, கரண்ட் பில், தண்ணி பில், மளிகைப் பொருட்கள், போக்குவரத்து செலவு, அப்புறம் இன்சூரன்ஸ் பிரீமியம் போன்ற சமாளிக்க முடியாத செலவுகள். இந்த 50% உங்க அடிப்படை வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். இதுல உங்களால முடிஞ்ச அளவுக்கு சேமிக்க முடியுமானால், அது ரொம்பவே நல்லது. இந்த பகுதிதான் உங்க மாச பட்ஜெட்டின் அடித்தளம்.

2. 30% - ஆசைகளுக்காக (Wants): அடுத்து, உங்க சம்பளத்துல 30% உங்க ஆசைகளுக்காக ஒதுக்கணும். ஆசைகள்னா, சினிமா பார்க்கிறது, ஹோட்டல்ல சாப்பிடுறது, புது டிரஸ் வாங்குறது, கேபிள் டிவி சப்ஸ்கிரிப்ஷன், ஜிம் மெம்பர்ஷிப், சுற்றுலா போறது, புது போன் வாங்குறதுன்னு இதெல்லாம் இந்த கேட்டகிரில வரும். இதெல்லாம் அத்தியாவசியம் இல்லை. ஆனா, இந்த செலவுகள்தான் வாழ்க்கையை கொஞ்சம் சந்தோஷமா, ரசிச்சு வாழ உதவும். இந்த 30%க்கு மேல போனா, அது உங்க பட்ஜெட்டை பாதிக்கும்.

3. 20% - சேமிப்பு மற்றும் கடன் அடைத்தல் (Savings & Debt Repayment): கடைசியா, உங்க சம்பளத்துல 20% சேமிப்புக்கும், கடனை அடைக்கிறதுக்கும் ஒதுக்கணும். எதிர்காலத்துக்காக சேமிக்கிறது இந்த பகுதியில வரும். கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன் மாதிரி இருக்கிற கடன்களை சீக்கிரமா அடைக்கிறதுக்கும் இந்த பணத்தை பயன்படுத்தலாம். இந்த 20% தான் உங்களை பண ரீதியா சுதந்திரமா வாழ வழிவகுக்கும். இதுதான் உங்க பண எதிர்காலத்துக்கு நீங்க செய்யற முதலீடு.

இதையும் படியுங்கள்:
எளிமை என்பது ஒரு ஆடம்பரமான ஆபரணம்; இதை எந்தெந்த வழிகளில் வெளிப்படுத்தலாம்?
Money

இந்த 50-30-20 ரூல் ரொம்பவே எளிமையானது. இதைப் ஃபாலோ பண்றதுக்கு பெரிய கணக்கெல்லாம் போட தேவையில்லை. மாசம் சம்பளம் வந்ததும், இந்த மூணு பகுதிக்கும் பணத்தை பிரிச்சு வச்சிடுங்க. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கலாம், ஆனா ஒரு சில மாசங்கள்ல இது பழகிடும். இந்த முறையை நீங்க கடைபிடிச்சா, உங்க பணம் எங்க போகுதுன்னு தெரியும்.

logo
Kalki Online
kalkionline.com