

இந்தியாவில் மருத்துவ செலவுகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் குடும்பத்தில் உள்ள முதியவர்களுக்கான, பெற்றோர்களுக்கான நிதி உதவி மற்றும் தரமான சிகிச்சையைப் பெற சுகாதார காப்பீடு அவசியமாகிறது. பெற்றோருக்கான சுகாதார காப்பீடு என்பது அவர்களின் வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகளிலிருந்தது அவர்களது சேமிப்பை பாதுகாக்கும்.
இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்கள் அல்லது பெற்றோர்களுக்கு உரிய காப்பீட்டுத் திட்டங்களை இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான ஸ்டார் ஹெல்த், எஸ்பிஐ ஜெனரல் மற்றும் ஆதித்யா பிர்லா போன்ற நிறைய முன்னணி நிறுவனங்கள் வழங்குகின்றன.
காப்பீடு திட்டங்களை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள்:
கவரேஜ் வரம்பு:
வயதான காலத்தில் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் ரூபாய் 5 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரையிலான கவரேஜ் கொண்ட பாலிசிகளைத் தேர்வு செய்வது நல்லது.
முன்பே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலம்:
நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற முற்கால நோய்களுக்கான காத்திருப்பு காலம் (பொதுவாக 1 முதல் 4 ஆண்டுகள்) எந்தப் பாலிசியில் குறைவாக உள்ளது என்பதை ஒப்பிட்டு பார்க்கவும்.
அறை வாடகை வரம்பு:
பாலிசியில் அறை வாடகைக்கு வரம்பு உள்ளதா என்பதை சரி பார்க்கவும். வரம்பற்ற அறை வாடகை இருப்பது நல்லது.
இணை-பணம் (Co-payment):
சில மூத்த குடிமக்கள் திட்டங்களில் மருத்துவச் செலவில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நீங்கள் சொந்தமாக செலுத்த வேண்டியிருக்கலாம். பூஜ்ஜிய இணை-பணம் (Zero Co- payment) உள்ள பாலிசிகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
வரிச்சலுகை:
வருமான வரிச் சட்டம் பிரிவு 80D -இன் கீழ் பெற்றோரின் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்திற்கு வரி விலக்கு பெற முடியும். ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் வயது மற்றும் உடல் நிலையை பொறுத்து வெவ்வேறு திட்டங்களை வழங்குகின்றன. அதில் நமக்கு பொருத்தமான திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
முழுமையான குடும்ப ஃப்ளோட்டர் சுகாதார திட்டம்:
முழுமையான குடும்ப ஃப்ளோட்டர் திட்டம், ஒரே சம்இன்ஷுர்டு தொகையின் கீழ் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் விரிவான கவரேஜ் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார திட்டத்தில் பாலிசிதாரர்கள் தங்கள் துணைவர், பெற்றோர், குழந்தைகள் மற்றும் சில நேரங்களில் மாமனார், மாமியார் போன்றவர்களையும் சேர்க்கலாம்.
இந்த பாலிசி மருத்துவமனை அனுமதிக்கு முன் மற்றும் பின் உள்ள செலவுகள், டே-கேர் சிகிச்சைகள், ஆம்புலன்ஸ் செலவுகள், ஆயுர்வேதம் போன்ற மாற்று ஆயுஷ் சிகிச்சைகள் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகின்றன. ஒரே பிரீமியத்தை செலுத்துவதன் மூலம் குடும்பத்தின் சுகாதாரத் தேவைகளை செலவு குறைவாகவும், திட்டமிட்ட முறையிலும் நிர்வகிக்க உதவும் திட்டமாக இது கருதப்படுகிறது.
அதிக உடல்நல அபாயம் கொண்ட வயதான உறுப்பினரை குடும்பத்தில் சேர்ப்பது அதிக ப்ரீமியம், நீண்ட வெயிட்டிங் பீரியட் மற்றும் கவரேஜ் தொகை விரைவில் முடிவடையும் நிலையை ஏற்படுத்தலாம். அதனால் இத்தகைய குடும்பங்கள் மூத்த குடிமக்கள் சுகாதார காப்பீட்டை தேர்வு செய்வது சிறந்தது.
பெற்றோருக்கான சுகாதார காப்பீடு என்பது முதிய வயதில் ஏற்படும் நோய்கள், அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொழுது ஏற்படும் பெரும் செலவுகளில் இருந்து நிதி பாதுகாப்பை அளிக்கிறது. இது நம் சேமிப்பை பாதுகாத்து, சிறந்த மருத்துவ வசதியை நம் பெற்றோருக்கும் உறுதி செய்கிறது.
ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டங்களுக்கும் மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக பாலிசிகளுக்கும் இடையே உள்ள பிரீமியம் மற்றும் கவரேஜ் வித்தியாசங்களை நீங்கள் துல்லியமாகக் கண்டறிவீர்கள். இந்தத் தெளிவு, அதிக பிரீமியம் செலுத்துவதைத் தவிர்த்து, மிகக் குறைந்த செலவில் உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் முழுமையான மருத்துவப் பாதுகாப்பை உருவாக்க உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: