தங்கக் கடன் இனி ரொம்ப ஈஸி! சிறு தொழில்களுக்கான RBI-யின் சூப்பர் அறிவிப்பு!

RBI and Gold Loan
RBI and Gold Loan
Published on

நம்மில் பலருக்கும் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கும். குறிப்பாக, கைவினைஞர்கள், சிறிய அளவில் நகை செய்பவர்கள் என பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனால், தொழில் தொடங்க பணம் வேண்டுமே. 

வங்கியில் கடன் வாங்கலாம் என்றால், அதற்கான வழிமுறைகள் சில நேரங்களில் கடினமாக இருக்கும். இந்த நிலையில், தங்கம் சார்ந்த சிறு தொழில் செய்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய செய்தியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. வாங்க, அது என்னன்னு விரிவாகப் பார்க்கலாம்.

முன்பு நிலைமை என்ன?

இதுவரைக்கும், வங்கிகளில் தங்கத்தை மூலதனமாக வைத்து தொழில் கடன் (Working Capital Loan) வாங்குவது என்றால், அது பெரும்பாலும் பெரிய நகைக்கடை உரிமையாளர்களுக்கு மட்டும்தான் எளிதாக இருந்தது. அவர்கள் தொழில் செய்வதற்காக தங்கத்தை வாங்க அல்லது கையிருப்பில் வைக்க கடன் பெற்றார்கள். ஆனால், அதே தங்கத்தை மூலப்பொருளாக வைத்து வேலை செய்யும் ஒரு சாதாரண கைவினைஞருக்கோ, தங்க முலாம் பூசும் பட்டறை வைத்திருப்பவருக்கோ கடன் கிடைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. இதனால், பல சிறு தொழில்கள் அடுத்த கட்டத்திற்கு வளர முடியாமல் சிரமப்பட்டன.

RBI-யின் புதிய அதிரடி மாற்றம்!

இப்போது RBI இந்த விதியை மாற்றிவிட்டது. இனிமேல், நகைக்கடைக்காரர்கள் மட்டுமல்ல, தங்கத்தை ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தும் எந்த ஒரு சிறு தொழில் செய்பவரும் தங்கள் தொழிலுக்காக வங்கிகளில் எளிதாகக் கடன் வாங்கிக்கொள்ளலாம்.

உதாரணமாக, நீங்க ஒரு கைவினைஞரா இருந்து, தங்க நகைகள் செய்து கொடுக்கிறீர்களா? அல்லது, கோயில் சிலைகளுக்கு, பரிசுப் பொருட்களுக்கு தங்க முலாம் பூசும் தொழில் செய்கிறீர்களா? ஏன், சில எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் கூட தங்கத்தை சிறிதளவு பயன்படுத்துவார்கள். இது போன்ற எந்தத் தொழிலில் நீங்கள் இருந்தாலும், இனி உங்கள் தொழில் மூலதனத்திற்காக வங்கிகளில் தங்கக் கடன் பெற முடியும். இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பை சிறு தொழில் செய்பவர்களுக்கு வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
உலகளவில் இந்திய சினிமாவை பெருமைப்படுத்திய அஜித்...வாழ்த்திய ரசிகர்கள்...!!
RBI and Gold Loan

வட்டி விகிதத்திலும் தளர்வு!

இதுமட்டுமில்லாமல், சிறு வணிகக் கடன்களுக்கான வட்டி விகிதத்திலும் ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளார்கள். பொதுவாக, வங்கிகள் கடன் கொடுக்கும்போது, வட்டியுடன் சேர்த்து சில கூடுதல் கட்டணங்களை விதிப்பார்கள். இந்த கூடுதல் வட்டியை மூன்று வருடத்திற்கு ஒருமுறைதான் முன்பு மாற்ற முடியும். 

ஆனால், புதிய விதியின்படி, கடன் வாங்கியவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்றால், அதாவது வட்டியைக் குறைக்க முடியும் என்றால், மூன்று வருடத்திற்கு முன்பாகவே வங்கிகள் அதைக் குறைக்கலாம். இது கடன் வாங்கியவர்களுக்கு வட்டிச் சுமையைக் குறைக்கும் ஒரு அருமையான வாய்ப்பு.

இதையும் படியுங்கள்:
இந்திய சினிமாவில் களமிறங்கும் Hollywood இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர்!
RBI and Gold Loan

சுருக்கமாகச் சொன்னால், இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்புகள், சிறு தொழில்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம். இது வெறும் நகைக்கடைக்காரர்களுக்கு மட்டுமல்லாமல், தங்கம் சார்ந்து உழைக்கும் ஆயிரக்கணக்கான கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 

இதன் மூலம் கடன் கிடைப்பது சுலபமாவதால், பல புதிய தொழில்கள் உருவாகும், ஏற்கனவே இருக்கும் தொழில்கள் வளரும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com