முதிர்வடையும் முதலீட்டை மறு முதலீடு செய்வது சரியான தீர்வா?

Reinvestment
Reinvestment
Published on

உங்களின் முதலீடு முடிவுக்கு வரும் நிலையில், முதிர்வுத் தொகையை நேர்த்தியான முறையில் கையாள்வது எப்படி என்றும், மறு முதலீடு செய்வது சரியாக இருக்குமா என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

நம்முடைய வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பிற்காக ஒதுக்குகிறோம். இந்த சேமிப்பை பல வழிகளில் நாம் முதலீடு செய்ய முயற்சிக்கும் போது, அதிலிருக்கும் சாதக, பாதகங்களை அறிந்து கொள்வது அவசியம். பல முதலீட்டுத் திட்டங்களில் உங்களின் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ற ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து முதலீடும் செய்யத் தொடங்கி விடுவீர்கள். இது குறுகிய கால முதலீடாக இருந்தால், முதிர்வுத் தொகையை ஏதேனும் அத்தியாவசியத் தேவைக்கு பயன்படுத்தலாம். ஆனால், அதுவே நீண்ட கால முதலீடாக இருந்தால், முதிர்வுத் தொகையை என்ன செய்வது? எப்படிக் கையாள்வது போன்ற குழப்பங்கள் சிலருக்கு இருக்கும்.

நீண்டகால முதலீடு முடிவுக்கு வரும் போது கிடைக்கும் முதிர்வுத் தொகையைப் பயன்படுத்துவதும், மறு முதலீடு செய்வதும் ஒருவருடைய நிதி இலக்குகளை பொருத்தது. அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைக்கு அதிக பணம் தேவைப்பட்டால், முதர்வுத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைகள் தீர்ந்த பிறகு மீதமிருக்கும் பணத்தை குறுகிய கால முதலீடுகளில் பயன்படுத்தலாம்.

தேவைகள் எதுவும் இல்லையெனும் போது, மறு முதலீடு செய்து முதிர்வுத் தொகையை இரட்டிப்பாக்க முயற்சிக்கலாம். இதற்கு உதவும் வகையில் சில வங்கிகளும் மறுமுதலீடு செய்வதற்கான வசதியை வழங்குகின்றன.

முதிர்வுத் தொகையை மீண்டும் மறு முதலீடு செய்யலாமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இருப்பினும் மறு முதலீட்டை வட்டி விகிதத்தைப் பொறுத்து தான் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் அதிக வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால் நமக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆகவே பல முதலீட்டுத் திட்டங்களுடன் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்.

இதையும் படியுங்கள்:
ஒரு நல்ல முதலீடு என்றால் என்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்!
Reinvestment

வட்டி விகிதம் எல்லா காலத்திலும் ஒரே மாதிரியாக இருக்காது. முதிர்வு காலத்தில் வட்டி குறைவாக இருந்தால் முதலீட்டை விலக்கிக் கொண்டு, சி றிது காலம் காத்திருந்து வட்டி விகிதம் ஏறுமுகத்தில் இருக்கும் போது முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் முதலீட்டை மறுமுதலீடு செய்ய நினைத்தாலும் அல்லது விலக்கிக் கொள்ள நினைத்தாலும் வரி விதிப்பு உள்ளிட்ட சில அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், வைப்புநிதித் திட்டத்தின் வழியாக கிடைக்கும் வட்டிப் பணத்திற்கு வரி விதிப்பு உண்டு. ஆகையால், முடிவெடுப்பதற்கு முன் வரித் தாக்கத்தைக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

வைப்புநிதி முதலீடுகள் பாதுகாப்பானது என்றாலும், மறுமுதலீட்டிற்கு அதிக பலன் கிடைக்கும் வர்த்தக வைப்புநிதியைத் தேர்ந்தெடுக்கலாம். தொடர்ந்து முதலீடு செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதால், ஒரே மாதிரியான முதலீட்டில் கவனம் செலுத்துவதை விட மாற்று முதலீடுகளில் உங்கள் கவனத்தைச் செலுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com