18 வயதிற்கு குறைவானவர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

minor invest in stock market
minor invest in stock market
Published on

பங்குச்சந்தை, ஒரு காலத்தில் சில பெரியவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று, இளம் தலைமுறையினரும் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள். 18 வயதிற்கு குறைவானவர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய சில நடைமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் உள்ளன.

இந்திய சட்டப்படி, 18 வயதுக்கு குறைவானவர்கள் நேரடியாக பங்குச்சந்தையில் கணக்கு திறந்து முதலீடு செய்ய முடியாது. ஏனென்றால், அவர்கள் ஒப்பந்தங்களில் ஈடுபட சட்டரீதியாக தகுதியற்றவர்கள். ஆனால், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், 18 வயதுக்குட்பட்டவர்கள் சரியான வழிகாட்டுதலுடன், அவர்களும் பங்குச்சந்தையின் பலன்களை பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
ஏசி வாங்கப் போறீங்களா? இந்த 'டன்' கணக்கு உங்களுக்குத் தெரியுமா?
minor invest in stock market

இதற்கான தீர்வு கார்டியன் கணக்கு (Guardian Account). அதாவது, 18 வயதுக்கு குறைவானவர்களின் பெயரில், அவர்களது பெற்றோர் அல்லது கார்டியன் ஒரு டீமேட் மற்றும் டிரேடிங் கணக்கை தொடங்கலாம். இந்த கணக்கு மைனரின் பெயரில் இருந்தாலும், அனைத்து வர்த்தக முடிவுகளும், நிதி பரிமாற்றங்களும் கார்டியன் மூலமாகவே நடக்கும். உதாரணமாக, உங்கள் மகன்/மகள் பெயரில் கணக்கு இருந்தால், நீங்கள் தான் பங்குகளை வாங்கவும், விற்கவும் முடியும். அனைத்து பொறுப்பும் கார்டியனுக்குதான்.

முதலீடு செய்யத் தொடங்குவதற்கு முன், ஒரு சில விஷயங்களை மனதில் கொள்வது முக்கியம். 

1. பங்குச்சந்தையைப் பற்றி நன்றாகப் படித்துத் தெரிந்துகொள்வது: வெறும் ஆர்வத்தின் பேரில் நுழையாமல், அடிப்படை விஷயங்களான பங்குகள் என்றால் என்ன, கம்பெனிகளை எப்படி தேர்ந்தெடுப்பது, ரிஸ்க் மேனேஜ்மென்ட் போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக பல ஆன்லைன் கோர்ஸ்கள், புத்தகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் உள்ளன.

2. ஒரு நல்ல புரோக்கரைத் தேர்ந்தெடுப்பது: பல புரோக்கர்கள் கார்டியன் கணக்குகளை வழங்குகிறார்கள். அவர்கள் வழங்கும் சேவைகள், கமிஷன் கட்டணங்கள், மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்த்து சிறந்த ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அதேசமயம், மைனரின் பான் கார்டு, கார்டியனின் பான் கார்டு, ஆதார் கார்டு, முகவரிச் சான்று போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை முதலீடு - வாரன் பஃபெட் கூறும் ஆலோசனைகள்...
minor invest in stock market

3. பொறுமை மற்றும் நீண்ட கால நோக்கம் மிக முக்கியம்: பங்குச்சந்தை என்பது வேகமாக பணக்காரர் ஆகும் வழி அல்ல. குறிப்பாக இளம் வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்கும் போது, அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய அதிக வாய்ப்பு கிடைக்கும். கூட்டு வட்டியின் மகிமையைப் புரிந்து கொண்டு, சிறிய தொகையாக இருந்தாலும் தொடர்ந்து முதலீடு செய்வது மிகப்பெரிய பலனைத் தரும். 

இளம் வயதிலேயே முதலீட்டை கற்றுக்கொள்வது, அவர்களுக்கு நிதி சுதந்திரத்திற்கான ஒரு நல்ல அடித்தளமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com