ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கழிக்க... எல்ஐசியின் இந்த பென்ஷன் திட்டத்தை மிஸ் பண்ணாதீங்க!

 pension scheme
pension scheme
Published on

ரிஷ்தா ஓய்வூதிய பீமா யோஜனா (Varishtha Pension Bima Yojana) என்பது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்காக, எல்ஐசி (LIC) மூலம் இந்திய அரசு வழங்கும் ஒரு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டமாகும். இது 10 ஆண்டுகளுக்கு 8% உத்தரவாதமான வருடாந்திர வட்டி விகிதத்துடன், மாதாந்திர/காலாண்டு/அரையாண்டு/ ஆண்டு ஓய்வூதியத் தேர்வுகளை வழங்குகிறது. இது ஒரு தனி பிரீமியம் முதலீட்டு திட்டமாகும்.

முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

*இத்திட்டம் ஆண்டுக்கு 8% உத்தரவாத வட்டி விகிதத்துடன் உறுதியான ஓய்வூதியத்தை வழங்குகிறது. இது பல மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்டங்களைவிட அதிகமாகும்.

*இந்த பாலிசி 15 வருட லாக்-இன் காலம் கொண்டது.

*60 வயது நிரம்பியவர்கள் இதில் முதலீடு செய்யலாம். இத் திட்டத்திற்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

*ஓய்வூதியம் நேரடியாக வங்கிக் கணக்கில்(ECS/NEFT) செலுத்தப்படும். எனவே காசோலை மூலம் தொகையை ரொக்கமாகவோ அல்லது டிமாண்ட் டிராஃப்டைப் பெறவோ தேவையில்லை.

*பாலிசிதாரர்கள் மாதாந்திரம், அரையாண்டு, காலாண்டு அல்லது ஆண்டுதோறும் என பல்வேறு முறைகள் மூலம் ஓய்வூதியத்தைப் பெறுவதை தேர்வு செய்யலாம்.

*பாலிசிதாரர்கள் பாலிசியைப் பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள் பாலிசியை ரத்து செய்யலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் முத்திரை வரி கட்டணங்களை கழித்த பிறகு பிரீமியம் தொகை திரும்பப் பெறப்படும்.

*பாலிசிதாரர் இறந்தால், நாமினிக்கு பிரீமியம் திருப்பி வழங்கப்படும். பாலிசிதாரர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வடையும்போது, அவர் செலுத்திய தொகை திரும்பப் பெறப்படும்.

இதையும் படியுங்கள்:
நிதி மேலாண்மை: பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டிய மிக முக்கியமான பாடம்!
 pension scheme

*பாலிசிதாரர் 15 ஆண்டுகளுக்குள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டால் பாலிசியை சரண்டர் செய்து 98% தொகையைப் பெறலாம்.

*3 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீடு செய்த தொகையில் 75% வரை கடன் பெறும் வசதியும் உள்ளது.

*இது வருமான வரிச்சலுகைகளை வழங்குகிறது. அதாவது செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80Cன் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் ஓய்வூதிய தொகைக்கு வரி விதிக்கப்படும்.

2) VPBYக்கு தேவையான ஆவணங்கள்:

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயது சான்று, இருப்பிடச் சான்று மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் அவசியம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், KYC ஆவணங்களுடன் அருகிலுள்ள எல்ஐசி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் பாலிசிதாரர் குறிப்பிட்ட கால இடைவெளியில் இருப்புச் சான்றிதழை எல்ஐசியின் படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தத் திட்டம் மூத்த குடிமக்களின் நிதிச்சுமையை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com