ஷேர் மார்க்கெட்டை விட தமிழர்களுக்கு நிலத்தின் மீது இவ்வளவு ஆசையா? அதிர வைக்கும் புள்ளிவிவரம் இதோ!

Tamil people investment secrets
Tamil people investment secrets
Published on

முதலீடு என்றாலே ஒவ்வொரு மாநில மக்களுக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை வடமாநிலத்தவர்கள் ஒரு வழியைப் பின்பற்றினால், தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு பாதையில் பயணிப்பார்கள். சேமிப்பு என்பது தமிழர்களின் இரத்தத்திலேயே ஊறிய ஒரு பண்பு. 

ஆனால் கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்தப் பணத்தை எந்த இடத்தில் முதலீடு செய்கிறார்கள் என்பதில் தான் ஒரு பெரிய சுவாரஸ்யம் அடங்கியுள்ளது. இந்திய அளவிலான புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால், பங்குச் சந்தை, நிலம் மற்றும் தங்கம் ஆகிய மூன்றிலும் தமிழ்நாட்டு மக்களின் முதலீட்டு விகிதம் மற்ற மாநிலங்களை விட மிகவும் வித்தியாசமாக இருப்பதைக் காண முடிகிறது. 

நிலத்தின் மீதான தீராத காதல்!

தமிழ்நாட்டு மக்களுக்கு எப்போதுமே ரியல் எஸ்டேட் & நிலத்தின் மீது ஒரு அதீத காதல் உண்டு. ரிசர்வ் வங்கி, செபி (SEBI) போன்ற அமைப்புகள் வெளியிட்ட தரவுகளின்படி, தமிழ்நாட்டு மக்கள் தங்களின் மொத்த சேமிப்பில் சுமார் 60 சதவீதத்தை நிலம், ரியல் எஸ்டேட் துறையில்தான் முதலீடு செய்கிறார்கள்.

ஒரு சொந்த வீடு, ஒரு துண்டு நிலம் வாங்குவது என்பது இங்கு வெறும் முதலீடு மட்டுமல்ல, அது சமூகத்தில் ஒரு பெரிய அந்தஸ்தாகவே பார்க்கப்படுகிறது. தங்களுக்குப் பிறகு தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நிரந்தரமான பாதுகாப்பை நிலம் மட்டுமே தரும் என்று பலரும் ஆழமாக நம்புகிறார்கள்.

தங்கத்தை குவிக்கும் தமிழர்கள்!

நிலத்திற்கு அடுத்தபடியாக தமிழர்கள் அதிகம் விரும்புவது தங்கத்தைத்தான். உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் மட்டும் சுமார் 6720 டன் தங்கம் இருப்பதாக ஒரு மலைக்க வைக்கும் தகவல் கூறுகிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்க நாட்டின் அதிகாரப்பூர்வ தங்க இருப்புக்கு சமமான ஒரு அளவாகும். தமிழ்நாட்டு மக்கள் தங்களின் சேமிப்பில் முப்பது சதவீதத்தை தங்கம் வாங்குவதற்காகவே ஒதுக்குகிறார்கள். வட மாநிலங்களை விட தென்னிந்தியாவில்தான், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில்தான் தங்கத்தின் மீதான மோகம் பல மடங்கு அதிகமாக உள்ளது.

பங்குச் சந்தையில் சுணக்கம்!

இந்திய அளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மேற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் சேர்த்தாலே வெறும் 7 சதவீத மக்கள் மட்டுமே பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அவர் தமிழ்நாட்டு போலீஸ்!
Tamil people investment secrets

தமிழ்நாட்டு மக்கள் தங்களின் சேமிப்பில் வெறும் மூன்று சதவீதத்தை மட்டுமே ஷேர் மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள். பங்குச்சந்தை என்றாலே அது ஒரு பெரிய சூதாட்டம், அதில் பணம் போட்டால் நஷ்டம்தான் வரும் என்ற ஒரு பழைய காலத்து பயம் இன்னும் பல கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் மாறாமல் அப்படியே இருக்கிறது.

மாறிவரும் ட்ரெண்ட்!

இவ்வளவு நாட்கள் நிலம் மற்றும் தங்கம் என இருந்தவர்கள் இப்போது மெல்ல மெல்ல மாறத் தொடங்கியிருக்கிறார்கள். நேரடியாக ஷேர் மார்க்கெட்டில் பணத்தை விடுவதற்குப் பதிலாக, மாதம் தோறும் சிறுசிறு தொகையாக மியூச்சுவல் ஃபண்டுகளில் (SIP) முதலீடு செய்யும் பழக்கம் சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
எந்த உடைக்கு எந்த தோடு அணியலாம்? ஒரு கம்ப்ளீட் கைடு!
Tamil people investment secrets

தமிழர்களைப் பொறுத்தவரை எந்த ஒரு முதலீடும் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் முதல் சாய்ஸ். அதனால் தான் தலைமுறை தலைமுறையாக நிலத்தையும் தங்கத்தையும் அவர்கள் இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ரிஸ்க் எடுக்க விரும்பாத அந்தப் பழைய மனநிலை இன்று வரை பெரிய அளவில் மாறவில்லை என்றாலும், இன்றைய இளைஞர்கள் பங்குச் சந்தையின் லாபத்தைப் புரிந்து கொண்டு அதில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கத் தொடங்கியிருப்பது ஒரு ஆரோக்கியமான மாற்றம்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com