இந்த 5 விஷயங்கள் தெரியவில்லை என்றால் போலீஸ் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்! 

Income Tax
Income Tax
Published on

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெருகி வரும் இக்காலகட்டத்தில், பணப் பரிவர்த்தனைகள் குறித்த சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். வங்கியில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு வரம்பு உள்ளது. அந்த வரம்பை மீறும்போது வருமான வரித்துறை விளக்கம் கேட்க வாய்ப்புள்ளது. அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்க்கலாம். அத்தகைய 5 பரிவர்த்தனைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்தல்:

ஒரு நிதியாண்டில் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அந்தத் தகவல் வருமான வரித்துறைக்கு தானாகவே சென்றுவிடும். இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தாலும் பொருந்தும். இத்தகைய பெரிய டெபாசிட்களுக்கு, பணத்திற்கான ஆதாரம் குறித்து வருமான வரித்துறை விளக்கம் கேட்கலாம். எனவே, முறையான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் இருப்பது அவசியம்.

2. நிலையான வைப்புத்தொகையில் (Fixed Deposit) முதலீடு:

வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வது போலவே, ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான வைப்புத்தொகைகளில் ரூ.10 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்தாலும் வருமான வரித்துறை உங்களை விசாரிக்கலாம். எனவே, நிலையான வைப்புத்தொகையில் அதிக முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.

3. பெரிய சொத்து பரிவர்த்தனைகள்:

சொத்து வாங்கும் போது ரூ. 30 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால், சொத்து பதிவாளர் இது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிப்பார். இத்தகைய பெரிய ரொக்கப் பரிவர்த்தனைகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால், பணத்திற்கான ஆதாரத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

4. கிரெடிட் கார்டு பில் செலுத்துதல்:

கிரெடிட் கார்டு பில் ரூ. 1 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக செலுத்தினால் அல்லது ஒரு நிதியாண்டில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் கிரெடிட் கார்டு பில் செலுத்தினால், வருமான வரித்துறை பணத்தின் ஆதாரம் குறித்து விளக்கம் கேட்கலாம். எனவே, கிரெடிட் கார்டு பில்களை ஆன்லைன் மூலம் செலுத்துவது சிறந்தது.

இதையும் படியுங்கள்:
சுற்றுச்சூழல், ஆரோக்கியம் மற்றும் காலநிலை ஒழுங்கு முறையைப் பராமரிப்பதில் மலைகளின் பங்கு!
Income Tax

5. பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், கடன் பத்திரங்கள் வாங்குதல்:

பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், கடன் பத்திரங்கள் போன்ற முதலீடுகளில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், அந்தத் தகவல் வருமான வரித்துறைக்கு சென்றுவிடும். எனவே, இத்தகைய முதலீடுகளுக்கு முறையான ஆவணங்கள் வைத்திருப்பது அவசியம்.

மேற்கூறிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, வருமான வரித்துறைக்குத் தேவையான விளக்கங்களை அளிக்க தயாராக இருக்க வேண்டும். முறையான ஆவணங்கள் மற்றும் வருமான ஆதாரங்களை வைத்திருப்பது இதுபோன்ற விசாரணைகளைத் தவிர்க்க உதவும். வருமான வரி செலுத்துவது நமது கடமை என்பதை உணர்ந்து, சரியான நேரத்தில் வரி செலுத்துவதன் மூலம் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com