தங்கத்தை வாங்க வேண்டாம்... முதலீடு செய்யுங்கள்! SGB முக்கிய அம்சங்கள்!

சாவரின் கோல்டு பாண்ட் பத்திரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்டு, தங்க முதலீட்டை பாதுகாப்பான மற்றும் வசதியான முறையில் செய்ய உதவுகின்றது.
Sovereign Gold Bonds
Sovereign Gold Bonds
Published on

சாவரின் கோல்டு பாண்ட் (Sovereign Gold Bonds - SGB) என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் அரசாங்க பத்திரங்களாகும். இந்திய ரிசர்வ் வங்கியால் இந்திய அரசு சார்பாக வெளியிடப்படும் இவை கிராம்களில் தங்கத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும். இவை பௌதிக தங்கத்தை (Physical Gold) சேமிக்க ஒரு சிறந்த மாற்று வழியாகும். முதலீட்டாளர்கள் இந்த பத்திரங்களை பணமாக செலுத்த வேண்டும். மேலும் பத்திரங்கள் முதிர்ச்சி அடையும் பொழுது பணமாக திரும்பிப் பெறப்படும். இந்த பத்திரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வழங்கப்பட்டு, தங்க முதலீட்டை பாதுகாப்பான மற்றும் வசதியான முறையில் செய்ய உதவுகின்றது.

இதன் முக்கிய அம்சங்கள்:

அரசு உத்தரவாதம்:

இந்த SGB பத்திரங்கள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுவதால் இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும் அளிக்கிறது.

கிராம் தங்கத்தில் குறிப்பு:

இந்த பத்திரங்கள் பௌதீக தங்கத்துக்கு பதிலாக தங்கத்தின் மதிப்பில் முதலீடு செய்ய அனுமதிக்கின்றன. ஒவ்வொரு பத்திரமும் கிராம் தங்கத்தில் குறிப்பிடப்படுகிறது, அதாவது நாம் தங்கத்தை அதன் விலையில் முதலீடு செய்கிறோம்.

அதிகபட்ச முதலீட்டு வரம்பு:

தனி நபர்கள் மற்றும் இந்து ஒருங்கிணைந்த குடும்பங்கள் (HUF) ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 4 கிலோ தங்கம் வரை முதலீடு செய்யலாம். அதே சமயம் அறக்கட்டளைகள் மற்றும் பிற நிறுவனங்கள் 20 கிலோ வரை முதலீடு செய்ய முடியும்.

பங்குச் சந்தை மூலம் வர்த்தகம்:

இந்த பத்திரங்களை பங்குச் சந்தைகள் மூலம் வாங்கலாம் அல்லது விற்கலாம். இது முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.

கூடுதல் வருமானம்:

  • முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். இது தங்க முதலீட்டில் கூடுதல் வருமானத்தை வழங்குகிறது.

  • இந்த பத்திரங்களின் மதிப்பு சந்தையில் தங்கத்தின் ஏற்ற இறக்கங்களை பொறுத்து மாறுபடும்.

  • இது ஒரு பாதுகாப்பான மற்றும் வசதியான முதலீடாகும். பௌதீக தங்கத்தை வைத்திருப்பதில் உள்ள ஆபத்துக்களைத் தவிர்த்து, பாதுகாப்பாகவும் எளிமையாகவும் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த வழியாகும்.

  • SGBல் முதலீடு செய்வது எளிதானது மற்றும் டீமேட் வடிவத்திலும் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
தங்க பத்திரம் என்றால் என்ன? அதனை வாங்க மத்திய அரசு ஏன் அழைப்புவிடுத்துள்ளது?
Sovereign Gold Bonds

இதன் நன்மைகள்:

  • சேமிப்பில் ஆபத்து இல்லை. முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு 2.5% என்ற விகிதத்தில் வட்டி சம்பாதிக்க முடியும்.

  • வருடாந்திர மூலதன வளர்ச்சி. சந்தை மதிப்புடன் சேர்ந்து வட்டியும் சம்பாதிக்கலாம். முதிர்வு காலத்தில் கிடைக்கும் லாபம் மீது மூலதன ஆதாய வரி விதிக்கப்படாது. இது ஒரு சிறந்த வரி நன்மையாகும்.

  • இந்த பத்திரங்கள் RBI மூலம் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. இது முதலீட்டில் வெளிப்படைத்தன்மையை அளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
ரிசர்வ் வங்கி அறிவிப்பு: தங்கப் பத்திர திட்டத்தில் 108% லாபம். உங்க கிட்ட தங்கப் பத்திரம் இருக்கா...?
Sovereign Gold Bonds
  • உடல் ரீதியான தங்கத்தை சேமித்து வைக்கும் பொழுது ஏற்படும் ஆபத்துகள், திருட்டு அல்லது சேதங்கள் போன்றவற்றை இந்த பத்திரங்கள் தவிர்க்கின்றன.

  • தங்கத்தின் சந்தை விலை அதிகரிக்கும் பொழுது பத்திரத்தின் மதிப்பும் அதிகரிக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் விலை உயர்வின் பலன்களைப் பெற முடியும்.

  • தங்கம் வாங்க முடியாத குறைந்த வருமானம் கொண்டவர்களும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com