ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி சேமிக்கலாம்: இந்திய அஞ்சல் துறை திட்டங்கள்!

India Post Department schemes
India Post Department schemes
Published on

வருமான வரி செலுத்துவோருக்கு வரி சேமிப்பு என்பது ஒரு முக்கியமான நிதி நடவடிக்கையாகும். இந்திய அஞ்சல் துறை, பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்கள் மூலம் வருமான வரிச் சேமிப்பிற்கு வழிவகுக்கிறது. பழைய வரி விதிப்பு முறையின் கீழ் வரி தாக்கல் செய்பவர்கள், 2025 மார்ச் 31-க்குள் நிதியாண்டு 25-க்கான தங்கள் முதலீடுகளை முடிப்பது அவசியம். அஞ்சல் துறையின் மூலம் கிடைக்கும் சில சிறந்த வரி சேமிப்புத் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

1. அஞ்சலக பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

இந்தத் திட்டத்தில் மொத்தமாகவோ அல்லது 12 தவணைகளாகவோ பணத்தைச் செலுத்தலாம். இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். முதிர்வுக்குப் பிறகு, இந்தத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். PPF கணக்கில் செலுத்தப்படும் தொகைக்குக் கிடைக்கும் வட்டி முழுவதுமாக வரி விலக்கு பெறக்கூடியது. கணக்கைத் தொடங்கிய ஏழாவது நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பணத்தை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. தற்போது, PPF திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

2. அஞ்சலக சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY)

10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் இந்தக் கணக்கைத் திறக்கலாம். ஒரு பாதுகாவலர் இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் அதிகபட்சமாக இரண்டு கணக்குகளைத் திறக்கலாம். பெண் குழந்தைக்கு 21 வயதான பிறகு, கணக்கை மூடி பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். கணக்கு மூடப்படாவிட்டால், அந்தத் தொகைக்குத் தொடர்ந்து வட்டி கிடைக்கும். SSY கணக்கு தற்போது 8.2% வட்டி வழங்குகிறது, இது வங்கிகளின் நிலையான வைப்பு நிதிகளை விட அதிகமாகும்.

3. அஞ்சலக தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC)

அரசு ஊழியர்கள், சம்பளம் பெறுபவர்கள் மற்றும் வணிகர்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டம் இது. இந்தத் திட்டத்திற்கு முதலீட்டு வரம்பு இல்லை, மேலும் வருமான வரியும் இல்லை. வங்கி கடன் பெறுவதற்கு NSC சான்றிதழ்களைப் பயன்படுத்தலாம். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள், தற்போது 7.7% வட்டி வழங்கப்படுகிறது.

4. அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். ஓய்வு பெற்றவர்கள் அல்லது 55 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களும் இதில் சேர முடியும். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இந்தத் திட்டத்தின் கீழ் ₹30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. SCSS தற்போது 8.2% வட்டி வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
பிசிசிஐ-யின் ஆண்டு வருமானம் இத்தனை கோடியா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
India Post Department schemes

5. 5 ஆண்டு அஞ்சலக நேர வைப்புத்தொகை

இது வங்கிகளின் நிலையான வைப்பு நிதி திட்டத்தைப் போன்றது. தற்போது, 5 ஆண்டு கால வைப்புத்தொகைக்கு அஞ்சலகம் 7.5% வட்டி வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகள், பிரிவு 80C-இன் கீழ் ₹1.5 லட்சம் வரையிலான வரி விலக்குக்குத் தகுதியுடையவை. இந்தத் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசால் ஆதரிக்கப்படுவதால், முதலீடுகளுக்கு முழுமையான பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com