ஆதிகுணசேகரனின் கடைசி குரல்.. வைரலாகும் எதிர்நீச்சல் ப்ரோமோ!

எதிர்நீச்சல் ப்ரோமோ
எதிர்நீச்சல் ப்ரோமோ

டிகர் மாரிமுத்துவின் கணத்த குரல் எபிசோட் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் சத்யப்ரியா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் நடித்து வருகிறார்.

கோலங்கள் சீரியலுக்குப் பிறகு இயக்குநர் திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். ஆணாதிக்கம் மிக்க அண்ணன் - தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம்.

இந்த சீரியலை பலரும் பார்ப்பதே ஆதி குணசேகரின் அட்டகாசமான நடிப்பு தான். ஆனால் அவர் டப்பிங் பணியின் போது கடந்த வாரம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் ஒட்டு மொத்த தமிழகத்தையுமே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இவருக்கு பதில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற பேச்சு எழுந்து வரும் நிலையில், இவரின் கடைசி குரல் என எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. தனது கணீர் குரலால் பலரையும் திரும்பி பார்க்க வைத்த மாரிமுத்து, இதுவரை இல்லாத அளவிற்கு புகழ் உச்சத்தை அடைந்தார். இதன் மூலம் அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக அவர் ரசிகர்களை சோக கண்ணீரில் மூழ்கடித்து சென்றுவிட்டார். இதுவரை அவர் மறைந்த பிறகும் இத்தனை நாட்கள் சன் டிவியில் அவர் நடித்த காட்சிகள் ஒளிப்பரப்பாகி வந்தன. இந்த நிலையில் ஆதிகுணசேகரனின் கடைசி குரல் என ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது யூடியூப்பின் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com