பிக்பாஸ் வீட்டிலிருந்து அழுது கொண்டே வெளியேறிய ரச்சிதா!

rakshitha
rakshitha

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஐய் டிவியில் 90 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் நிறைவடைய போகிறது. அமுதவாணன் டிக்கெட் டூ ஃபினாலேவின் கோல்டன் டிக்கெட்டை வென்று முதல் பைனலிஸ்டாக கடைசி வாரத்துக்குள் நுழைந்து விட்டார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைவான வாக்குகள் பெற்று சிவின்கணேசன் அல்லது மைனா நந்தினி வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்த நிலையில் குறைவான வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ரச்சிதா மகாலட்சுமி அழுது கொண்டே வெளியேறி உள்ளார். இது ரச்சிதா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ரச்சிதா மகாலட்சுமி
ரச்சிதா மகாலட்சுமி

முன்னதாக இந்த வாரம் கமலஹாசன் "இந்த வீட்டில் டைட்டில் வின்னராக ஆவதற்கு இவருக்கு தகுதியே இல்லைன்னு யாரை நினைக்கிறீங்க "என கமல்ஹாசன் கேள்வியை எழுப்பினார். வழக்கம்போல ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அசீம் மீண்டும் அசீமை டார்கெட் செய்யும் விதமாகவே கதறினார்கள்.

அடுத்தவங்களை இரிடேட் பண்றது மாதிரி பேசுறாரு, வச்சு செய்வேன்னு சொல்றாரு , மோசமான கேம் ஆடி வருகிறார் ,அசீம் அவருக்கு நிச்சயம் இந்தடைட்டில் வின்னர் ஆக தகுதியே இல்லை என விக்ரமன், ஷிவின், ஏடிகே, ரச்சிதா, மைனா உள்ளிட்ட ஹவுஸ்மேட்கள் சொன்னார்கள்.

இந்த வாரம் அசீமை தவிர்த்து அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இடம் பிடித்தனர். இந்த வாரம் சேவ் ஆகும் ஆர்டரை வைத்துத் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முடிவு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவி அமுதவாணனுக்குத் தான் டைட்டிலை வழங்க போகின்றனரா? என்கிற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இனி வரும் வாரம் பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அறிகுறியாக இந்த வாரமே பெட்டியை கொடுத்து ரச்சிதாவை வெளியே அனுப்பி விட்டனர். ரச்சிதா இந்த வாரம் வெளியேறிய நிலையில், ஷிவின், விக்ரமன், அசீம், கதிரவன், அமுதவாணன், ஏடிகே மற்றும் மைனா பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பார்கள். இதில், அதிகபட்சம் பணப்பெட்டியைமைனா நந்தினி அல்லது கதிரவன் எடுத்துச் செல்ல வாய்ப்புகள் இருப்பதாக உள்ளேயும் , வெளியேயும் எதிர்பார்க்கப்படுகிறது. பிக் போஸ் வீட்டில் எதையும் கணிக்க முடியாது டைட்டில் வின் பண்ண மாட்டோம் என்று என்று சொல்லி அசீம் கூட பெட்டியை எடுத்துச் செல்லலாம்.

எது எப்படியோ பிக்பாஸ் நிகழச்சி தற்போது பரபரப்பாக அதன் இறுதி கட்டத்தினை நெருங்கி வருகிறது. அமுதவாணனை டைட்டிலை

வெல்வாரா? ஷிவின் கணேசன் தட்டிச் செல்வாரா? விகாரமான மற்றும் அசெம்முக்கு வாய்ப்புள்ளதா? கடைசி நேர ட்விஸ்ட் இருக்குமா? என ஏகப்பட்ட கேள்விகளை இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இனி பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் அதிரடியாக இருக்க போகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com