சீரியலில் என்ட்ரி கொடுத்த கௌசல்யா... என்ன சீரியல் தெரியுமா?
சன் டிவியில் பிரபலமாக ஓடி கொண்டிருக்கும் சுந்தரி சீரியலில் தான் நடிகை கௌசல்யா என்ட்ரி கொடுத்துள்ளார். இது தொடர்பான புரோமோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
90ஸ் காலங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா. சத்யராஜ், முரளி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு அசத்தியுள்ளார். இவர் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் வெற்றியால் கோலிவுட்டில் மிகவும் பிரபலமானார். இதில் நடிகர் விஜய்யுடன் மாஸாக நடித்திருப்பார். நடிகை கௌசல்யா என்றதும் நினைவிற்கு வருவது பல சூப்பர் ஹிட் பாடல்கள் தான். இவர் நடித்து வெளியான பல பாடல்கள் இன்றும் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தான். பல நடிகைகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு காணாமல் போகின்றனர். அப்படி தான் நீண்ட நாட்களாக கௌசல்யாவும் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார்.
சமீபத்தில் இவர் நடிகை ராதாவின் மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன. ரசிகர்கள் பலரும் கௌசல்யாவா இது என கேட்டு வந்தனர். தற்போது இவர் சின்னத்திரையில் என்ட்ரி ஆகியுள்ளார். நிறைய நடிகைகள் சில காலங்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு செல்கிறார்கள். ராதிகா, சுகன்யா, தேவையாணி என பல நடிகைகள் சீரியலில் நடித்து வந்த நிலையில், தற்போது கௌசல்யாவும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சுந்தரி 2 சீரியலில் கௌசல்யா என்ட்ரி கொடுத்து இருக்கிறார். கலெக்டர் பதவியை சுந்தரி ராஜினாமா செய்ய முடிவெடுக்கும் நிலையில், அவருக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் தான் அவரது ரோல் இருக்கிறது. இந்த புரோமோ காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.