பழனிச்சாமி காதலுக்கு பாக்கியா கொடுத்த ரிப்ளை: பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!

பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி
Published on

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமி காதலுக்கு பாக்கியா என்ன சொல்கிறார் என்பதே விறுவிறுப்பாகியுள்ளது.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். ஒரு பக்கம் சந்தேகத்தின் உச்சியில் இருக்கும் ஜெனியிடம் செழியன் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென தாத்தாவாக இருக்கும் கோபி தனது 2வது மனைவி ராதிகா மூலம் மீண்டும் அப்பாவாகி உள்ளார்.

இந்த விஷயம் ஒட்டுமொத்த வீட்டிற்கும் தெரிய வர, ‘இது எனது வீடு. அதனால் வீட்டை விட்டு கிளம்புங்கள்’ என்று பாக்கியா கோபியிடம் கூறினார். வீட்டை விட்டுப் போவதை தாங்கிகொள்ள முடியாத கோபி, பாக்கியாவை பழி வாங்குவதற்காக தனது தாய் ஈஸ்வரியையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

ராதிகா வீட்டிற்கு சென்ற ஈஸ்வரியால் தினமும் சண்டை, சச்சரவுகள்தான். இதனால் வீட்டில் ஒழுங்காக சாப்பிடாத ஈஸ்வரி அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போகிறார். ஒரு கட்டத்தில் சாப்பிடாமல் ஈஸ்வரி மயக்கம் போட, அவர் குணமாகி மீண்டும் ராதிகா வீட்டிற்கே வருகிறார். இனிமேல் ஈஸ்வரி இங்கு வரமாட்டார் என்று நினைத்து கொண்டிருந்த கமலா, ராதிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையும் படியுங்கள்:
திருப்பதி கோயிலில் நடிகர் அஜித் வழிபாடு: வைரலாகும் காட்சிகள்!
பாக்கியலட்சுமி

மீண்டும் நம்பி வந்த ஈஸ்வரியை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்த கோபி, மூன்று நேரமும் தாயை பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்கிறார்.

தொடர்ந்து நேற்றைய எபிசோடில் இனியா பிறந்த நாளுக்கு வந்த பழனிச்சாமியின் குடும்பத்தினர், பாக்கியாவை பழனிசாமிக்கு பெண் கேட்டுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்கியா, தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் அவர் என் நண்பர் எனக் கூறுகிறார். இதனால் கதை கொஞ்சம் விறுவிறுப்பாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com