பிக்பாஸின் நடுவார எலிமினேஷன்.. வெளியேறியது இவரா?

பிக்பாஸின் நடுவார எலிமினேஷன்.. வெளியேறியது இவரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 6 சீசன்களை கடந்த பிக்பாஸ், தற்போது 7வது சீசனை தொட்டுள்ளது. இந்த சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 70 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் பிக்பாஸ் முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படும் விதமாக அமைந்துள்ளது. அதன் படி இன்று வெளியான புரோமோவில் மிட் வீக் நாமினேஷன் நடைபெறுகிறது. யாரும் எதிர்பாராத ட்விஸ்டாக இது அமைந்துள்ளது.

எந்த சீசனிலும் இல்லாததாக 7வது சீசனில் நிறைய புதுபுது விஷயங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி தான் இந்த பிக்பாஸ், ஸ்மால் பாஸ் கான்செப்ட், இந்த விஷயத்தை அனைவரும் வரவேற்கின்றனர் தொடர்ந்து ஏற்கனவே ஒரு வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் 5 பேர் உள்ளே வந்த நிலையில், 7வது சீசனில் வெளியே சென்ற 2 நபர்கள் மீண்டும் ஒரு வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்தனர்.

இப்படி அடுத்தடுத்து பல ட்விஸ்ட்களை கொண்ட பிக்பாஸ் சீசன் 7 தற்போது மேலும் ஒரு ட்விஸ்டை கொண்டு வந்துள்ளது. அதாவது எலிமினேஷன் என்பது நடைபெறுவது சாதரணமானது தான். வழக்கமாக வார இறுதியில் வோட்டிங் அடிப்படையில் கமல்ஹாசன் ஒருவர் அல்லது இருவரை எலிமினேட் செய்வார், ஆனால் வியாழக்கிழமையான நேற்று மிட் வீக் எலிமினேஷன் நடைபெற்றது.

அதில் நாமினேட் செய்யப்பட்ட 6 பேரின் முகங்களும் பசில் போல் வைக்கப்பட்டது. அதில் யாருடைய முகம் முழுமை பெறவில்லையோ அவர்கள் தான் எலிமினேட் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. முதலில் தினேஷ், கூல் சுரேஷ், நிக்சன் முகம் முழுமை பெற்ற நிலையில், அர்ச்சனா, விஷ்ணு, அனன்யா மூவரும் எலிமினேட் ஆனால் என்ன செய்வார்கள் என்று மனம் திறந்தார்கள். அப்போது விஷ்ணு கண்கலங்கியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து கடைசியில் அனன்யா முகம் முழுமை பெறாததால் அவர் நேற்று வெளியேறினார். பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆன அவர், தொடர்ந்து 2வது முறையில் சீக்கிரமே வெளியேறிவிட்டார். இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com