மேனேஜர் ஆகும் தொழிலாளர்.. பிக்பாஸில் வந்த ட்விஸ்ட்.. ரசிகர்கள் குஷி!

biggboss 8
biggboss 8
Published on

பிக்பாஸ் 8வது சீசனில் இந்த வார டாஸ்கில் இன்று பெரிய ட்விஸ்ட் நடந்துள்ளது.

உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிக்பாஸ் சீசன் தொடர்ந்து வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த வேலை காரணமாக பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ரசிகர்கள் எதிர்பாராத ஒருவரான விஜய் சேதுபதி களமிறங்கினார். தற்போது பலர் விஜய் சேதுபதியின் கருத்துக்களை ஆதரித்தாலும், அவர் முகத்தில் அடித்தபடி பேசுகிறார் என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

இதுவரை இல்லாததாக 8வது சீசனில் ஆண் பெண் என இரு வீடாக பிரிக்கப்பட்டது. கடந்த சீசனில் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என பிரிக்கப்பட்டது வரவேற்கபட்டது. தொடர்ந்து இந்த சீசனிலும் வரவேற்கப்பட்ட நிலையில் அனைவரும் சேஃப் கேம் ஆடுவதாக கருத்து பரவி வந்தது. இந்த நிலையில் கோடுகள் அழிக்கப்பட்டு ஒரே வீடாக ஆன நிலையில், அனைவரும் தனித்தனியாக தங்கள் திறமையை காட்டி வருகின்றனர். கடந்த வார டெவில் டாஸ்கில் பலரும் ரசிகர்களின் வெறுப்பை பெற்ற நிலையில், ஆனந்தியும், சாச்சனாவும் எலிமினேட் செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வார தொடக்கத்திலேயே அருணுக்கும் தீபக்கிற்கும் சண்டை முட்டியது. இந்த சண்டை வெடித்த நிலையில் தர்ஷிகா கேப்டன் ரஞ்சித்தின் ஒரு முட்டையை எடுத்துவிட்டார். தொடக்கத்திலேயே நெகட்டிவாக தொடங்கிய ரஞ்சித்திற்கு சூப்பராக ஒரு டாஸ்க் வந்தது.

இதையும் படியுங்கள்:
அஜித் ரசிகர்களுக்கு வந்த ஷாக் நியூஸ்... என்ன தெரியுமா?
biggboss 8

இந்த வார டாஸ்க் மேனேஜர் Vs தொழிலாளர்கள். இதில் டாப் ப்ளேயர்ஸாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மேனேஜர்களாகவும், அதற்கு கீழே இருப்பவர்கள் தொழிலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நேற்றைய டாஸ்கில் அனைவரும் பிரித்து எடுத்த நிலையில், திடீரென இன்று ஒரு ட்விஸ்ட் வந்துள்ளது. அதாவது சரியாக விளையாடதவர் தொழிலாளர்களாவும், தொழிலாளர்களில் நன்றாக விளையாடியவர்கள் மேனேஜராகவும் புரோமோட் செய்யப்படுவார்கள். இந்த ட்விஸ்டை எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேனேஜர்கள் தொழிலாளர்களை வறுத்தெடுத்து வரும் நிலையில், இந்த ட்விஸ்ட் என்னவாகும் என்று பார்க்கலாம்.

அந்த வகையில் இன்று வெளியான புரோமோவில், முதலில் சௌந்தர்யா தொழிலாளராகவும், ரஞ்சித் மேனேஜராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அடுத்து வெளியான புரோமோவில், அருண் மீண்டும் தொழிலாளராக வேண்டும் என மற்ற மேனேஜர்கள் கூறுகின்றனர். அதற்கு சௌந்தர்யா மறுப்பு தெரிவிக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com