ஜெயிலில் ஈஸ்வரியிடம் விசாரணை... கமலாவை கொல்ல போன கோபி!

Baakiyalakshmi
Baakiyalakshmi
Published on

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஈஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்த, மறுபக்கம் கடுப்பான கோபி கமலாவையும், ராதிகாவையும் திட்டி தீர்க்கிறார்.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ராதிகா கரு கலைந்த பிறகு பல ட்விஸ்ட்களை கொண்டிருக்கிறது.

ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரிதான் காரணம் என ராதிகாவும், கமலாவும் கோபியிடம் போட்டுக்கொடுக்க, தனது தாயை தவறாக நினைத்துக் கொள்கிறார் கோபி. இதனால் கொந்தளித்த கோபி, ஈஸ்வரிதான் ராதிகாவை கீழே தள்ளிவிட்டார் என நினைத்து தாயிடம் சண்டைக்குச் செல்கிறார். மேலும், தாயை வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஈஸ்வரி நிலைகுலைந்துள்ளார். வீட்டில் தினமும் அழுது கொண்டிருந்த ஈஸ்வரியை சமாதானம் செய்து, பாக்கியா வெளியூருக்கு காரில் அழைத்துச் சென்று மகிழ்ச்சி படுத்துகிறார்.

மேலும், ஈஸ்வரியின் பழைய சிநேகிதியை கண்முன் கொண்டு வந்து சர்ப்ரைஸ் செய்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஈஸ்வரி, மலரும் நினைவுகளாக தோழியிடம் பலவற்றை பகிர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, கஷ்டத்தின் எல்லைக்குச் சென்ற கோபி, மீண்டும் போதையை கையிலெடுக்கிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர, ராதிகா கொந்தளித்து வருகிறார்.

போதையில் கமலாவை திட்டிய கோபியால் பிரச்சனை முட்டுகிறது. இதனால் பழி வாங்க வேண்டும் என நினைத்த கமலா, ஈஸ்வரி மீது போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து பாக்கியலட்சுமி இல்லத்திற்கு வந்த போலீசார், ஈஸ்வரியை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். இதனால் கதறி அழுத பாக்கியா குடும்பத்தினர், எவ்வளவு கூறியும் போலீசார் கேட்கவில்லை.

இதையும் படியுங்கள்:
HBD KB SIR! தமிழ் திரை உலகின் துருவ நட்சத்திரம்!
Baakiyalakshmi

போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போன ஈஸ்வரியை, போலீசார் துருவி துருவி விசாரணை நடத்துகின்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளோம் என போலீசார் கூற கடுப்பான கோபி, கமலாவையும், ராதிகாவையும் அடிக்க பாய்கிறார். உன்னால் என் வாழ்க்கையே போய்விட்டது என கோபியும் கூற ராதிகாவும் உங்களால் தான் இப்படி இருக்கிறேன் என சொல்கிறார்.

கஷ்டப்பட்டு இருந்த உனக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என கோபி கூற, குறுக்கிட்ட கமலாவையும் கழுத்தை நெரித்து கொலை செய்ய துணிந்து விட்டார் கோபி.மேலும், அம்மாவுக்கு ஏதாவது ஆனால் கொளுத்தி விடுவேன் என மிரட்டுகிறார். ஒரு பக்கம் ஈஸ்வரி போலீஸ் ஸ்டேஷனில் கதறி அழுகிறார். போலீசாரும் உண்மையை கூறு என சொல்லி டார்ச்சர் செய்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com