இனியாவை கைது செய்யும் போலீஸ்... அடுத்து என்ன நடக்கும்?

Baakiyalakshmi
Baakiyalakshmi
Published on

பாக்கியலட்சுமி சீரியலில் வெளியான புரோமோ ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ராதிகா கரு கலைந்த பிறகு பல ட்விஸ்ட்களை கொண்டிருக்கிறது.

ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரிதான் காரணம் என ராதிகாவும், கமலாவும் கோபியிடம் போட்டுக்கொடுக்க, தனது தாயை தவறாக நினைத்துக் கொள்கிறார் கோபி. இதனால் கொந்தளித்த கோபி, ஈஸ்வரிதான் ராதிகாவை கீழே தள்ளிவிட்டார் என நினைத்து தாயிடம் சண்டைக்குச் செல்கிறார். மேலும், தாயை வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஈஸ்வரி நிலைகுலைந்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, கஷ்டத்தின் எல்லைக்குச் சென்ற கோபி, மீண்டும் போதையை கையிலெடுக்கிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர, ராதிகா கொந்தளித்து வருகிறார். போதையில் கமலாவை திட்டிய கோபியால் பிரச்சனை முட்டுகிறது. இதனால் பழி வாங்க வேண்டும் என நினைத்த கமலா, ஈஸ்வரி மீது போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து பாக்கியலட்சுமி இல்லத்திற்கு வந்த போலீசார், ஈஸ்வரியை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். தொடர்ந்து நேற்று கோர்ட்டில் ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் சாட்சிகள் அனைத்தும் ஈஸ்வரிக்கு எதிராக திரும்ப கடைசி நேரத்தில் பாக்கியா மயூவை அழைத்து வந்து சாட்சி சொல்ல சொன்னார். அதில் ஈஸ்வரி நிரபராதி என நிரூபணமானதால் அவரை கோர்ட் ரிலீஸ் செய்தது. தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் நடந்த விஷயத்தை மயூவிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார் ராதிகா. மேலும் கமலாவை திட்டி தீர்க்கிறார். என்னை எல்லாரும் அசிங்க படுத்துறீங்களா என்று. தொடர்ந்து அம்மாவை பாக்க போன கோபிக்கு அசிங்கமே மிஞ்சியது. கடுப்பான ஈஸ்வரி கோபியை தலைமுழுகிவிட்டார்.

இதையும் படியுங்கள்:
தெலுங்கில் கலக்கும் நடிப்பு அசுரன்... வைரலாகும் மாஸ் வீடியோ!
Baakiyalakshmi

இந்த நிலையில், நேற்று 2 மணி நேரம் கோபிக்கும், பாக்கியாவுக்கு சமையல் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து வெளியான புரோமோவில், பார்ட்டிக்காக பப் போன இனியாவால் அங்குள்ள பசங்களுக்கு சண்டை ஏற்படுகிறது. இந்த சண்டை முற்றவே, அங்கு வந்த போலீசார் இனியாவையும் கைது செய்கின்றனர். மறுபுறம் இனியாவிற்கு என்ன ஆனது என பாக்கியா போன் செய்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே இனியா இப்படிதான் செய்தார் என கமெண்ட் செய்து வருகின்றனர். இப்போது தான் ஈஸ்வரி ஜெயிலுக்கு போய் வந்த நிலையில், தற்போது இனியா கைது செய்யபப்டுவதால் வீட்டில் என்ன நடக்கும் என சூடாக செல்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com