இனியாவை காப்பாற்றிய ராதிகா... குற்ற உணர்ச்சியில் பாக்கியா..!

Baakiyalakshmi
Baakiyalakshmi
Published on

பாக்கியலட்சுமி சீரியலில் வெளியான புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ராதிகா கரு கலைந்த பிறகு பல ட்விஸ்ட்களை கொண்டிருக்கிறது.

ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரிதான் காரணம் என ராதிகாவும், கமலாவும் கோபியிடம் போட்டுக்கொடுக்க, தனது தாயை தவறாக நினைத்துக் கொள்கிறார் கோபி. இதனால் கொந்தளித்த கோபி, ஈஸ்வரிதான் ராதிகாவை கீழே தள்ளிவிட்டார் என நினைத்து தாயிடம் சண்டைக்குச் செல்கிறார். மேலும், தாயை வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஈஸ்வரி நிலைகுலைந்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, கஷ்டத்தின் எல்லைக்குச் சென்ற கோபி, மீண்டும் போதையை கையிலெடுக்கிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர, ராதிகா கொந்தளித்து வருகிறார். போதையில் கமலாவை திட்டிய கோபியால் பிரச்சனை முட்டுகிறது. இதனால் பழி வாங்க வேண்டும் என நினைத்த கமலா, ஈஸ்வரி மீது போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து பாக்கியலட்சுமி இல்லத்திற்கு வந்த போலீசார், ஈஸ்வரியை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். தொடர்ந்து நேற்று கோர்ட்டில் ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் சாட்சிகள் அனைத்தும் ஈஸ்வரிக்கு எதிராக திரும்ப கடைசி நேரத்தில் பாக்கியா மயூவை அழைத்து வந்து சாட்சி சொல்ல சொன்னார். அதில் ஈஸ்வரி நிரபராதி என நிரூபணமானதால் அவரை கோர்ட் ரிலீஸ் செய்தது. தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் நடந்த விஷயத்தை மயூவிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார் ராதிகா. மேலும் கமலாவை திட்டி தீர்க்கிறார். என்னை எல்லாரும் அசிங்க படுத்துறீங்களா என்று. தொடர்ந்து அம்மாவை பாக்க போன கோபிக்கு அசிங்கமே மிஞ்சியது. கடுப்பான ஈஸ்வரி கோபியை தலைமுழுகிவிட்டார்.

இதையும் படியுங்கள்:
பெண் குழந்தைக்கு அப்பாவான யூடியூப்பர் இர்பான்... குவியும் வாழ்த்துக்கள்!
Baakiyalakshmi

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் கோபிக்கும், பாக்கியாவுக்கு சமையல் போட்டி நடைபெற்றது. மேலும், பார்ட்டிக்காகப் போன இனியாவால் அங்குள்ள பசங்களுக்கு சண்டை ஏற்படுகிறது. இந்த சண்டை முற்றவே, அங்கு வந்த போலீசார் இனியாவையும் கைது செய்கின்றனர். தொடர்ந்து இன்று வெளியான புரோமோவில், ராதிகா தான் போலிசிடம் இருந்து இனியாவை காப்பாற்றி பாக்கியாவிடம் ஒப்படைக்கிறார். அப்போது உங்கள் மகளை நான் காப்பாற்றியிருக்கிறேன் ஆனால் நீங்கள் மயூவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தீர்கள். இதுதான் பாக்கியா, ராதிகா என்று கூறி ஆவேசப்படுகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com