மீனா முகத்தில் நகையை வீசி எறிந்த விஜயா... பரபரப்பில் சிறகடிக்க ஆசை!

Siragadikka Aasai
Siragadikka Aasai
Published on

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னனி இடத்தை பிடித்து வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பான கதை களத்தை எட்டியுள்ளது.

கடந்த வாரம் சீரியலில் முத்துவின் பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம் இருந்தது. மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று ஏமாந்து விட்டார். இதனால் விஜயா, மீனாவின் நகையை கொடுத்தார். ஆனால், விஜயா அடமானம் வைக்காமல் விற்று விட்டார்.

இன்னொரு பக்கம் வீட்டில் முத்து பாட்டிக்கு கிப்ட் வாங்க, மீனா நகையை வாங்கி கடைக்கு சென்று இருந்தார். ஆனால், அது எல்லாம் கவரிங் என்று தெரிந்தது. அது பிறந்தநாள் முடிந்தவுடன் கவரிங் நகை விஷயத்தை அண்ணாமலை இடம் முத்து சொன்னார். அண்ணாமலை அதிர்ச்சியாகி விஜயாவிடம் கேட்டவுடன், எனக்கு தெரியாது. மீனா வீட்டில் தான் நகை மாறி இருக்கும். அவருடைய தம்பி தான் இந்த வேலையை செய்திருப்பான் என்று சொன்னார். இதனால் கோபமடைந்த மீனா, நாங்கள் ஏழைகள் தான். ஆனால், இப்படி எல்லாம் செய்ய மாட்டோம் என்று வாதம் செய்தார்.

இறுதியில் முத்து, இந்த வேலையை யார் செய்தது என்று எனக்கு தெரியும். ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்கிறார். அதற்குப் பிறகு சுருதியை வைத்து வேற குரலில் மனோஜ் சுருதியை பேச வைத்தார். ஆனால், உஷாரான மனோஜ் சமாளித்து தப்பித்து விடுகிறார். பின் முத்து, மீனா இருவரும் விஜயாவின் தோழி பார்வதி வீட்டிற்கு உண்மையை கண்டுபிடிக்க சென்றார்கள். கடைசியில் உண்மை சொல்லும் வரும் நேரத்தில் விஜயா வந்து தடுத்து நிறுத்துகிறார். மேலும், செல்வம்- முத்து இருவரும் பிரிட்ஜ் வாங்க ஒரு கடைக்கு சென்றார்கள். ஆனால், அந்த கடையில் இருந்தவர்கள் மனோஜ் இடம் பிரிட்ஜை ஏமாற்றி வாங்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ஆனந்த் ராதிகா தம்பதியினருக்கு அட்லீ அளித்த பரிசு… பாலிவுட் உலகமே ஷாக்!
Siragadikka Aasai

இந்த கும்பல் செய்த திருட்டு வேலையை அறிந்த போலீசார் எல்லோரையும் கைது செய்தது. அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் நடந்ததைப் பற்றி போலீஸ் இடம் சொல்வதை மறைந்து நின்று வீடியோ எடுத்த முத்து வீட்டில் காண்பிக்கிறார். இதை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விஜயா, ரோகினி நிற்கிறார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே எப்படி பணம் வந்தது? என்று கேட்க, மனோஜை அடித்து அந்த நேரத்தில் காப்பாற்றி விடுகிறார் விஜயா. கடைசியில் மனோஜ், ரோகினி இடம் மீனாவின் நகையை அடகு வைத்து தான் அந்த பணத்தை கொடுத்தேன் என்று உண்மையை உளறி விடுகிறார்.

இன்றைய எபிசோடில், மனோஜை உண்மை கூற சொல்லி முத்து அடிக்க செல்ல அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார். அவருக்கு பின் விஜயா இருப்பதையும் குடும்பத்தினர் தெரிந்துகொள்ள அண்ணாமலை மனோஜை புரட்டி எடுக்கிறார். அதோடு அண்ணாமலை, விஜயாவிடம் இனி பேச மாட்டேன், தண்ணீர் கூட உன்னிடம் வாங்கி குடிக்க மாட்டேன் என கூறுகிறார். உடனே விஜயா அறைக்கு சென்றவர் தான் வெளியே வரவில்லை.

இந்த நிலையில் நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் முத்து, மனோஜிடம் மீனாவிடம் மன்னிப்பு கேள் என்கிறார், ஆனால் ரோஹினி மனோஜ் ஏன் மீனாவிடம் கேட்க வேண்டும் என கோபப்படுகிறார். முத்து தவறு செய்தவர்கள் எந்த வயதாக இருந்தாலும் மன்னிப்பு கேட்டு தான் ஆக வேண்டும் என கூறுகிறார். இதனால் கடுப்பான விஜயா பெரிய நகை கொண்டு வந்துவிட்டாய், அம்மா வீட்டில் இருந்து பெரிய நகை கொண்டு வந்துவிட்டாய் என திட்டி, தனது கையில் இருக்கும் வளையலை கழற்றி மீனா மூஞ்சியில் வீசி எறிந்து அசிங்க படுத்துகிறார். இந்த புரோமோ காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com