மும்பையில் நாளை அதிகாலை 3 மணிக்கு...

மும்பை பரபர!
மும்பையில் நாளை அதிகாலை 3 மணிக்கு...
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

நாளை அதாவது 11.01.2023 அதிகாலை 3 மணிக்கு என்ன?

ந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக’ நடிகர் விஜய் ரசிகர்களுக்காக ‘வாரிசு’ திரைப்படம் செம்பூர் க்யூபிக் மாலில் அதிகாலை 3 மணிக்குத் திரையிடப்படவுள்ளது.

மும்பை மாநகரில் இதுவரை எந்தவொரு திரைப்படமும், ரசிகர்கள் காண அதிகாலையில்  திரையிடப்பட்டதில்லை.

மராட்டிய மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக சிறப்பு பூஜை செய்தும், பட்டாசுகள் வெடித்தும் ‘வாரிசு’ படம் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இயக்கத்தின் தலைவர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.

பொங்கல் ரிலீஸுக்கு முன்பாகவே இந்தச் சிறப்புக் காட்சி ரசிகர்களுக்காகத் திரையிடப்படவிருப்பதால் அனைவரும் ஆவலுடன் நாளை அதிகாலையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வாங்கண்ணே; வணக்கங்கண்ணே!

logo
Kalki Online
kalkionline.com