சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்ட அமீர்கான்- காரணம் இதுதான்!

Sivakarthikeyan and amirkhan
Sivakarthikeyan and amirkhan
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான், தான் சமீபத்தில் நடித்திருக்கும் "சிட்டாரே ஜமீன் பர்" (Sitaare Zameen Par) படத்திற்காக தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டதாகத் தெரிவித்துள்ளார். இது திரையுலக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரசன்னா என்பவர் இயக்கும் "சிட்டாரே ஜமீன் பர்" திரைப்படம், இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகவிருந்தது. முதலில், இந்தி பதிப்பில் ஃபர்ஹான் அக்தர் நடிக்கவும், தமிழ் பதிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவும் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இரு நடிகர்களும் கதை கேட்டு, நடிக்க சம்மதித்து தேதிகளையும் கொடுத்திருந்தனர்.

ஆனால், "லால் சிங் சத்தா" படத்தின் தோல்விக்குப் பிறகு மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அமீர்கான், நடிப்புக்கு ஒரு இடைவெளி எடுக்க நினைத்திருந்தார். இருப்பினும், "சிட்டாரே ஜமீன் பர்" படத்தின் கதை விவாதத்தில் கலந்துகொண்டபோது, அந்தக் கதை அவரை மிகவும் கவர்ந்தது. ஒரு கட்டத்தில், "ஏன் இந்தப் படத்தில் நான் நடிக்கக் கூடாது?" என்ற எண்ணம் அவருக்குள் தோன்றியுள்ளது.

இந்தக் கதை தனக்கு மிகவும் பிடித்துவிட்டதால், தானே இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்த அமீர்கான், முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். "நான் அவர்களிடம் நேர்மையாக என்ன நடந்தது என்பதை விளக்கினேன்.

இதையும் படியுங்கள்:
தூக்கத்தை தூண்டும் 5 உணவு வகைகள்!
Sivakarthikeyan and amirkhan

ஆரம்பத்தில் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், என்னுடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டனர். குறிப்பாக சிவகார்த்திகேயன், 'ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்? இந்தப் படம் உங்களுடையது, நீங்கள் தான் இதில் நடிக்க வேண்டும்' என்று கூறி ஆதரவு தெரிவித்தார்," என அமீர்கான் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அமீர்கானின் இந்த வெளிப்படையான செயல், அவரது தொழில்முறை நேர்மையையும், சக கலைஞர்களிடம் அவர் காட்டும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாக பலரும் பாராட்டி வருகின்றனர். "சிட்டாரே ஜமீன் பர்" திரைப்படம் ஜூன் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com