Ajith kumar
Ajith kumar

நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்... அதில் என் உயிர் போனாலும் பரவாயில்லை - நடிகர் அஜித்..!!

Published on

நடிகர் அஜீத் குமார் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டி பரபரப்பானது. அதில் அஜித் , விஜய் கரூரில் பரப்புரை செய்த போது கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது பற்றியும் கருத்து கூறியிருந்தார். அஜீத்தின் இந்த கருத்துக்களுக்கு விஜய் ரசிகர்கள் ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ரங்கராஜ் பாண்டேவின் சானாக்யா யூ ட்யூப் சேனலுக்கு ஆடியோ மூலம் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

அந்த பேட்டியில் ​ஆங்கில ஊடகத்தில் நான் பேசிய நல்ல கருத்துக்கள் , பலரின் சுயநல நோக்கங்களுக்கு ஏற்ப தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தனது அஜெண்டாவுக்கு ஏற்ப என் கருத்துக்களை மாற்றுகின்றனர். இங்கு எதை சொன்னாலும் அதை ​இங்கே பரபரப்பாக்கவே முயல்வார்கள் என்று எனக்குத் தெரியும்.​நான் எனக்குப் பிடித்த பாதையில் நேர்மறையான எண்ணத்துடன் பயணிக்கிறேன்.

முன்னர் அரசியல் பத்திரிகையாளர்கள் , சினிமா பத்திரிகையாளர்கள், என்று தனித்தனியாக இருந்தார்கள். ஆனால், இன்று சில சினிமா பத்திரிகையாளர்களே அரசியலில் கலந்து விட்டனர். எனக்கும் விஜய்க்கும் மோதல் இருப்பதை போலவே ஊடகங்கள் காட்டுகின்றன. எனது நல்ல எண்ணங்களை பற்றி கூறாமல் "அஜித் - விஜய் மோதல்", "அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையிலான போர்" என்பதுபோல மாற்றிவிட்டனர். ​நாம் இப்போது நச்சுத்தன்மை கலந்த சமூகமாக மாறி விட்டோம்.

எப்போதும் நான் விஜய்க்கு நல்லதையே நினைத்திருக்கிறேன், அவரை வாழ்த்தியும் உள்ளேன். எனது நல்லெண்ணங்கள் இளைஞர்களிடம் சரியாகச் போய் சேரவில்லை. என் பேட்டியை விஜய்க்கு எதிராக மாற்ற நினைக்கிறார்கள் , அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அஜித் கூறினார்.

அஜீத் தனது ரசிகர்களிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தார். முதலில் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் பாருங்கள். ​நான் நடித்த திரைப்படத்தை நன்றாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் வந்து பாருங்கள். என் ​படத்தைப் பார்க்கச் சொல்லி நான் யாரையும் வற்புறுத்த மாட்டேன் , ஒரு போதும் ஓட்டு கேட்டு உங்களிடம் வரவும் மாட்டேன். நான் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி இன்னும் 10, 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய அளவில் பேசப்படும் , என்றார்.

எப்போதும் நான் விஜய்க்கு நல்லதையே நினைத்திருக்கிறேன், அவரை வாழ்த்தியும் உள்ளேன். எனது நல்லெண்ணங்கள் இளைஞர்களிடம் சரியாகச் போய் சேரவில்லை. என் பேட்டியை விஜய்க்கு எதிராக மாற்ற நினைக்கிறார்கள் , அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அஜித் கூறினார்.

அஜீத் தனது ரசிகர்களிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தார். முதலில் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் பாருங்கள். ​நான் நடித்த திரைப்படத்தை நன்றாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் வந்து பாருங்கள். என் ​படத்தைப் பார்க்கச் சொல்லி நான் யாரையும் வற்புறுத்த மாட்டேன் , ஒரு போதும் ஓட்டு கேட்டு உங்களிடம் வரவும் மாட்டேன். நான் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி இன்னும் 10, 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய அளவில் பேசப்படும் , என்றார்.

வாழ்க்கை குறித்த தத்துவம்:

ரேஸ் காரில் அமரும் போதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும் , இந்த உயிர் போக ஒரு நொடிதான் ஆகும் என்று. அதனால் , ​எனக்கு எந்த உள்நோக்கமோ, திட்டமோ இல்லை. வாழ்க்கை மிகவும் எளிதில் உடையக்கூடியது , என்னால் முடிந்தவரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்.

கரூரில் நடந்தது துரதிஷ்டவசமானது, இதற்கு முன் ஆந்திரா தியேட்டரிலும் , பெங்களூரு கிரிக்கெட் மைதானத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது , பல நாடுகளிலும் நடந்துள்ளது.பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது நான் உள்பட அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு சில ஊடகங்கள் ரசிகர்கள் மீது பழி சுமத்துகிறார்கள் , எனது தந்தையின் மறைவின் போது அவரது உடலை படம்பிடிக்க சில ஊடகத்தினர் அவர்களது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்தார்கள். அவர்களை ரசிகர்கள் குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது. நானும் இந்த குற்றத்திற்கு பொறுப்பானவன் தான் , என்னிடத்திலும் தவறுகள் உள்ளன. நாம் அனைவரும் எது சரி என்று பார்த்து அதைப் பின்பற்ற வேண்டும்.

வாக்களிப்பதை நான் ஜனநாயக கடமையாக பார்க்கிறேன். தமிழ்நாடு தொடங்கி உலகம் முழுவதும் அரசுகள் இணைந்ததாக இருக்க வேண்டும். சில சமூகங்கள் சுரண்டப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் , அவர்களுக்கு குரல் கொடுப்பதை போல சில போலி சமூக ஆர்வலர்கள் உள்ளனர். அது போன்ற போலிகளால், மக்கள் மூளைச் சலவை ஆகாமல் கவனமாக இருக்க வேண்டும்.

சிலர் எப்போதுமே என்னை வேற்றுமொழிக்காரன் என்றே கூறி வருகிறார்கள் ,எனது பூர்வீகம் அடிக்கடி கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒரு நாள் வரும் அன்று இதே நபர்கள் உரத்த குரலில் என்னைத் தமிழன் என்று அழைப்பார்கள். கார் ரேஸில் ஒருநாள் சாதித்து இந்த நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் , அதில் என் உயிர் போனாலும் பரவாயில்லை. "தமிழ்நாடே விழித்துக் கொள், இந்தியாவே விழித்துக் கொள். அன்புடன் அஜித்" என்று பேட்டியை முடித்துக் கொண்டார்.

இதையும் படியுங்கள்:
உலகின் அதிவேக கட்டிடம்: 28 மணி நேரத்தில் 10 மாடி கட்டிடம்! தயார்...! மிரள வைக்கும் சீன வேகத்தின் சாதனை..!!
Ajith kumar
logo
Kalki Online
kalkionline.com