சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு.. எந்த படத்திற்காக தெரியுமா?

யோகி பாபு
யோகி பாபு

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் யோகிபாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் வெள்ளி திரைக்கு வந்தவர். வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு வழியாக யாமிருக்க பயமேன் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது.

இவரின் உருவத்தை பலரும் கேலி செய்து வந்த நிலையில் அதையே தனது பிளஸ் பாயிண்டாக பயன்படுத்தி அனைவரையும் சிரிக்க வைத்தார். தொடர்ந்து பல படங்கள் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்த அவர் கோலமாவு கோகிலா படத்தில் லீட் ரோலில் நடித்து அசத்தினார். இதையடுத்து இவருக்கு வாய்ப்புகள் குவிய, பெரிய பெரிய ஹீரோக்கள் அனைவருடனும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ஜெயிலர், ஜவான் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பல படங்கள் தற்போது பான் இந்தியா படமாக தான் அமைகிறது. அத வகையில், நடிகர் யோகிபாபு தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.

பிரபாஸ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில்தான் யோகிபாபு கமிட்டாகியிருக்கிறார் என்றும் அதற்காக தனது சம்பளத்தை தமிழில் வாங்குவதைவிட மூன்று மடங்கு உயர்த்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. கண்டிப்பாக யோகி தெலுங்கிலும் தனக்கென தனி மார்க்கெட்டை பிடிப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com