ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சமந்தா..!

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சமந்தா..!

சினிமாவில் இருந்து விலகியிருந்த சமந்தா சொன்ன குட்நியூசால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கணவர் நாகசைத்தன்யாவை விவாகாரத்து செய்துவிட்டு சுதந்திரமாக கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வந்தார். புஷ்பா படத்தில் உள்ள ஊ சொல்றியா பாடலில் குத்தாட்டம் போட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

இப்படி படங்களில் முன்னேறி வந்த சமந்தா, அடுத்த லெவலுக்கு செல்லபோகும் நிலையில் திடீரென அவர் நோயின் பிடியில் சிக்கினார். ஆம் மயோசிடிஸ் என்ற நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் தன்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்றும் ஒரு பேட்டியில் கண்ணீர் விட்டு கதறினார். சமந்தாவிற்கு இப்படி ஒரு நிலையா என ரசிகர்களும் வேதனையடைந்து வருகின்றனர். இந்த நோயின் காரணமாக சமந்தா பல படங்களை தட்டி கழிப்பதாக கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் கமிட்டான படத்தில் கூட நடிக்கமாட்டார் என சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால் சமந்தா ரசிகர்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு சமந்தா குட் நியூஸ் சொல்லியுள்ளார். சுமார் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தனது பணியை தொடங்க உள்ளதாக சமந்தா தெரிவித்துள்ளார். நான் கடந்த 7 மாதங்களாக நடிக்காமல் இருந்தேன், தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். தனது தோழியுடன் இணைந்து ஹெல்த் பாட்காஸ்ட் செய்ய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்.. 96 படம் ரீ ரிலீஸ்.. ரசிகர்கள் குஷி!
ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சமந்தா..!

சினிமாவில் இல்லை என்று வருத்தம் இருந்தாலும் அடுத்த வாரம் முதல் சமந்தாவை இந்த பாட்காஸ்ட் மூலம் சந்திப்பதில் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com