காதலியை கரம்பிடித்தார் பிக்பாஸ் அபிஷேக் ராஜா!

Abishek Raaja Wedding
Abishek Raaja Wedding

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அபிஷேக் ராஜா, தனது காதலியை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்குதோ, இல்லையோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பிரபலம் கிடைத்து விடுகிறது. யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருபவர் தான் அபிஷேக் ராஜா. படங்களை விமர்சனம் செய்து வருகிறார். இவர், சில சினிமா பிரபலங்களை பெட்டியும் எடுத்திருக்கிறார். இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக அரட்டை அடிப்பது, கலகலப்பாக இருப்பது போன்றவற்றை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற அபிஷேக் ராஜா ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இது அவருக்கு நெகட்டிவாக மாறியது. ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.

இதையும் படியுங்கள்:
மீண்டும் அப்பாவான சிவகார்த்திகேயன்!
Abishek Raaja Wedding

அஜய் ஞானமுத்து இயக்கிய 'இமைக்கா நொடிகள்' படத்தில் கதாநாயகனின் பாய் பெஸ்டியாக நடித்திருந்தார். இந்த நிலையில், காதலர் தினத்தன்று தனது காதலியை சமூக வலைதளங்களில் அறிவித்தார். இந்த நிலையில் தற்போது காதலியை கரம்பிடித்துள்ளார். இவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இவருக்கு ஏற்கனவே தீபா என்பவருடன் திருமணம் ஆகி, அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது. அதுபற்றி பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கூறி இருந்தார். அபிஷேக் ராஜா தன்னை அடித்து துன்புறுத்தியதால் தான் அவரை விவாகரத்து செய்து பிரிந்ததாக அவரது முதல் மனைவி தீபா அந்த சமயத்தில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின்னர் மீண்டும் காதலில் விழுந்த அபிஷேக் ராஜா, நெருங்கிய உறவினர்கள் மத்தியில் சிம்பிளாக திருமணத்தை முடித்துள்ளார். இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com