தனுஷ் 50: மீண்டும் இயக்குநர் அவதாரமெடுக்கும் நடிகர் தனுஷ்!

Dhanush 50: Dhanush, the actor who reincarnates the director!
Dhanush 50: Dhanush, the actor who reincarnates the director!https://www.youtube.com

டிகர் தனுஷ் இரண்டாவது முறையாக திரைப்பட இயக்குநர் அவதாரத்தில் தன்னுடைய  ஐம்பதாவது திரைப்படத்தில் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனது அசுர நடிப்பினால் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர். இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் ஒரு பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராக திரைத்துறையில் பயணித்து வருகிறார். தொடர்ந்து மாஸ் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்து ரசிகர்களையும் திரைத்துறையினரையும் அதிர வைப்பது நடிகர் தனுஷிற்கு கைவந்த கலை என்று கூட சொல்லலாம்.

ராஷ்மிகா மந்தனாவோடு இணையும் தனுஷ்: இவர் கடைசியாக நடித்த படம், ‘கேப்டன் மில்லர்.’ கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை இவருக்குப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜூனாவுடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இயக்குநராக தனுஷ்: இது ஒருபுறம் இருக்க, தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ‘தனுஷ் 50’ குறித்த அப்டேட் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைசாக அமைந்துள்ளது. இரண்டாவது முறையாக தனுஷ் ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் தோன்ற இருக்கிறார்.

கடந்த 2017ம் ஆண்டு ப.பாண்டி என்ற படத்தை தனுஷ் இயக்கினார். அதே படத்தில் இவர் நடிக்கவும் செய்திருந்தார். மேலும், அவரோடு இணைந்து ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன், தீனா, பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல  வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி, தனுஷுக்குள் இருந்த இயக்குநர் திறமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

இதையும் படியுங்கள்:
நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா மந்தனா... என்னாச்சு தெரியுமா?
Dhanush 50: Dhanush, the actor who reincarnates the director!

அதன் பின்னர் தற்போது இவர் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். ‘இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்’ என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தனுஷ் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அப்டேட்டைத் தொடர்ந்து இன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக #D50FirstLook என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கப்போவது குறித்த அறிவிப்பை முன்னதாகவே அறிவித்திருந்தார். தனுஷின், ‘வொண்டர்பார்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com