

தனுஷ் நடித்து லேட்டஸ்ட் ஆக வந்த இரு படங்களும் சரியாகப் போகவில்லை. இட்லிக்கடை, தேரே இஸ்க் மே (ஹிந்திப் படம்). அதனால் ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் போர்த் தொழில் என்ற மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் கரம் கோர்த்து கர (Kara) என்ற படத்தை கொடுத்திருக்கிறார் தனுஷ்.
ஸ்பாய்லர் அலெர்ட்
கதை நடக்கும் கால கட்டம் 1991. கல்ப் வார் நடந்த சமயம். கதைக்களம் ராமநாதபுரம் மாவட்டம் திருவெறும்பூர்.
நாயகன் ஒரு திருடன், கொள்ளைக்காரன். தன் மைத்துனருடன் சேர்ந்து ஒரு எம்.எல்.ஏ வீட்டில் திருட முயற்சிக்கிறான். அதில் நாயகன் மாட்டிக்கொள்கிறான்.
வில்லன் ஒரு போலீஸ் ஆபீசர். ரிட்டையர்மெண்ட்க்கு முன் பிரமாதமான ஒரு கேசை டீல் செய்து புகழ் பெற நினைப்பவர். அதனால் நாயகன் மீது பல கேஸ்களை எழுதி சிக்க வைக்க நினைக்கிறார்.
இது தெரிந்த நாயகன் லாக்கப்பில் இருந்து தப்பி ரேணிகுண்டா போய் நாயகியுடன் திருமணம் செய்து, ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் நாயகன் சொந்தமாக ஒரு மெஸ் வைக்கலாம் என்று முடிவெடுக்கிறான். அதற்குப் பணம் தேவை. சொந்த ஊருக்கு வந்து அப்பாவிடம் பணம் கேட்கிறான். ஆனால் டிராக்டர் வாங்குவதற்காக நிலத்தை வங்கியில் அடமானம் வைத்திருப்பதாக அப்பா சொல்கிறார்.
வங்கியைக் கொள்ளை அடித்து அந்தப் பணத்தை வைத்து லோனை அடைத்து நிலத்தை மீட்க நினைக்கிறார். இதற்குப்பின் நிகழும் பரபரப்பான சம்பவங்களே படம்.
நாயகன் ஆக தனுஷ் நடித்திருக்கிறார். படத்துக்குப் படம் அவர் நடிப்பில் மெருகு ஏறுகிறது.
நாயகி ஆக மமிதா பைஜூ. கிராமத்துபெண் ரோல் தான். தாவணி போட்ட தீபாவளி ஆக வருகிறார். முந்தைய படங்களில் இவரை கிளாமர் க்யூனாகப் பார்த்தவர்கள் இதை, இந்தத் தோற்றத்தை ரசிப்பார்களா?தெரியவில்லை.
வில்லன் ஆக, போலீஸ் ஆபீசர் ஆக சுராஜ் வெஞ்சாரமூடு கலக்கி இருக்கிறார். நுணுக்கமான நடிப்பு.
நாயகனின் அப்பா ஆக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பு, கெட்டப் இரண்டும் அருமை.
பேங்க் மேனேஜர் ஆக ஜெயராம். வில்லத்தனமான ரோல். நன்றாக நடித்திருக்கிறார்.
நாயகனின் தாய்மாமன் ஆக வரும் கருணாஸ் , மைத்துனர் ஆக வரும் பிருத்வி பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், ஸ்ரீஜா ரவி என மற்ற அனைவரின் நடிப்பும் கச்சிதம்.
இசை ஜி.வி பிரகாஷ் குமார். 2 பாடல்கள் அருமை. பின்னணி இசை ஓக்கே ரகம். ஆனால் விக்ரம் நடித்த அருள் படத்தில் இருந்து சில பிஜிஎம்களை சுட்டிருக்கிறார்.
தேனி ஈஸ்வர் தான் ஒளிப்பதிவு. பிரமாதமான படப்பிடிப்பு. 1991 கால கட்டத்தைக் கண் முன் நிறுத்துகிறது ஆர்ட் டைரக்சன்.
ஸ்ரீஜித் சுரங்கின் எடிட்டிஙகில் முதல் பாதியில் 45 நிமிடங்கள் செம போர். பின் பாதி நல்ல விறுவிறுப்பு. படத்தின் ரன்னிங்க் டைம் 161 நிமிடங்கள்.
ஆல்பர்ட் பிரகாஷ் உடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.
சபாஷ் டைரக்டர்
படத்தின் ஓப்பனிங்க் சீனில் எம்.எல்.ஏ வீட்டில் கொள்ளை அடிக்க முயலும் காட்சி நல்ல விறுவிறுப்பு.
கருணாஸ், பிருத்வி இவர்களுடன் இணைந்து பேங்க் கொள்ளை அடிக்கும் காட்சி அதகளம். தியேட்டரில் விசில் பறக்கிறது.
இயக்குனர் கமல் ரசிகர் என்பதால் கமல் ரெப்ரன்ஸ் சீன் அருமை. தேவர் மகன் ஷூட்டிங் சீனை சாமார்த்தியமாக இணைத்திருப்பது புத்திசாலித்தனம்.
வங்கிக் கடனால் மாதத்தவணை கட்ட முடியாமல் மக்கள் படும் அவஸ்தைகளை சொன்ன விதம்.
வயதான விவசாயி ஆக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் கெட்டப் அருமை. அதே போல் கே.எஸ்.ரவிக்குமாரின் உடல் மொழி பிரமாதம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
துணிவு, ஜெண்டில்மேன், இந்தியன், இட்லிக்கடை ஆகிய படங்களில் பார்த்த சில காட்சிகள் ரிப்பீட் ஆவது மைனஸ்.
திருட்டு என்பது ஒரு தொழில் அல்ல. அதை நியாயப்படுத்த முடியாது. திருடனை நாயகனாகக் காட்டி அவன் பக்க நியாயத்தை சொன்னது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
நாயகி வருவது நான்கே காட்சிகள். அவர் இல்லை என்றாலும் திரைக்கதையில் எந்த பாதிப்பும் இல்லை.
நாயகன் கொள்ளை அடிப்பது. தனியார் வங்கியா?அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கியா? என்ற விபரங்கள் மிஸ்சிங்.
கதை நடக்கும் காலகட்டம் 1990களில் என காட்ட வேண்டிய அவசியமே இல்லை. சிசிடிவி கேமரா பயம் இல்லாமல் ஈசியாகக் கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவே அப்படி 1990 எனக் காட்டுகிறார்கள்.
படம் சொல்லும் நீதி மோசம். பேங்க்கில் லோன் வாங்கிக் கட்ட முடியவில்லை எனில் அதே பேங்க்கில் கொள்ளை அடி. இது தான் நீதி. என்ன கொடுமை சார் இது?
படத்தின் மையக்கரு Hell or high water (2016) ஹாலிவுட் படத்தில் இருந்து எடுத்திருக்கிறார்கள். அதில் நாயகன் தன் சகோதரனுடன் சேர்ந்து திருடுவான். இதில் நாயகன் தன் மைத்துனனுடன் சேர்ந்து திருடுகிறான்.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - தனுஷ் ரசிகர்களுக்குப் பிடிக்கும். போர்த் தொழில் படத்துடன் ஒப்பிட்டால் இயக்குநருக்கு ஒரு சறுக்கல். இட்லிக் கடையுடன் ஒப்பிட்டால் தனுஷ்க்கு இது ஓக்கே ரகப்படம்.