

கணவரின் புகைப்படத்தை கையில் பச்சை குத்தி கொண்ட பிரேமலதா விஜயகாந்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கேப்டன் விஜயகாந்த் என மக்களால் போற்றப்பட்ட கலைஞர் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் உடலை காண லட்சக்கணக்கில் மக்கள் சென்னையில் குவிந்தனர். இவர்களின் கண்ணீருக்கு மத்தியில் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த், உடல் புதைக்கப்பட்டது. விஜயகாந்தி மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம்.
பல பேட்டிகளில் விஜயகாந்த் மனைவி பற்றி பேசியது உண்டு. அப்படி மனைவியே தெய்வம் என்று அடிக்கடி சொல்லும் விஜயகாந்தின் மனைவி, கணவரின் மறைவுக்கு பிறகு அவரின் புகைப்படத்தை தனது வலது கையில் பச்சை குத்தி கொண்டுள்ளார். விஜயகாந்த் எப்போதும் தன்னுடன் இருக்கும் விதமாக பச்சை குத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பிரேமலதாவின் மகனான விஜயபிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த் சிரித்தபடி இருக்கும் இந்த டாட்டூ புகைப்படத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து மிஸ் யூ கேப்டன் என பதிவிட்டு வருகின்றனர்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here