படம் தாமதம்... நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு! - விக்னேஷ் சிவன் அதிர்ச்சி!

vignesh shivan Nayanthara
vignesh shivan Nayanthara
Published on

தமிழ் திரையுலகில் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், சமீபகாலமாகப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அஜித்தின் பட வாய்ப்பை இழந்தது முதல், அரசு நிலம் தொடர்பான பேச்சுவார்த்தை சர்ச்சை வரை, விக்னேஷ் சிவன் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறார். இத்தகைய சூழலில், நயன்தாரா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தைத் தயாரிக்க சம்மதித்தார். இந்தத் திட்டம், தம்பதியினரின் தொழில்முறை உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரதீப் ரங்கநாதனை நாயகனாகக் கொண்டு 'லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்தப் படம், விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான செப்டம்பர் 18 அன்று வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திட்டமிட்டபடி, எந்தப் போட்டியும் இன்றி தனித்து வெளியாகும் வாய்ப்பு இருந்ததால், படக்குழுவும் நயன்தாராவும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால், தற்போது இந்த வெளியீட்டுத் திட்டத்தில் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டுள்ளது. படத்திற்கான சில காட்சிகள் இன்னும் படமாக்கப்படாமல் இருப்பதும், பின்னணி வேலைகள் நிறைவடையாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, விக்னேஷ் சிவனின் பிறந்தநாளன்று படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, படக்குழு அடுத்த ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கான முயற்சியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி!
vignesh shivan Nayanthara

இந்தத் தாமதம், நயன்தாராவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாம். விக்னேஷ் சிவன் மீது அவர் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. செப்டம்பர் 18 அன்று வெளியானால், வேறு பெரிய படங்களின் போட்டி இல்லாமல், 'லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி' தனியாக வசூலை அள்ளும் வாய்ப்பு இருந்தது. ஆனால், பிப்ரவரி 14 அன்று வெளியிடுவது என்பது, பல பெரிய படங்கள் போட்டிக்கு வரும் ஒரு காலகட்டமாகும். 

இது படத்தின் வசூலைப் பாதிக்கக்கூடும் என்ற பதட்டத்தில் நயன்தாரா உள்ளாராம். சொன்ன தேதியில் படத்தை வெளியிட முடியாதது, படத்திற்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தாமதம் படத்தின் வணிக ரீதியான வெற்றியை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது குறித்த கவலை நயன்தாராவின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com