1000 கோடி வசூலிக்கும் படங்களை என்னால் எடுக்க முடியாது – மணிரத்னம் ஓபன் டாக்!

Mani Ratnam
Mani Ratnam
Published on

தன்னால் 1000 கோடி வசூல் செய்யும் படத்தையெல்லாம் எடுக்க முடியாது என்று பேசியிருக்கிறார் மணிரத்னம்.

மணிரத்னம் மற்றும் கமல்ஹாசனும் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, வடிவுக்கரசி, அலி ஃபைசல், சன்யா மல்ஹோத்ரா என பலரும் நடித்திருக்கின்றனர். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். சென்னை, கோவா உள்பட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் முதல் பாடல் வெளியீட்டையே பிரம்மாண்டமான விழாவாக நடத்தியுள்ளனர் படக்குழுவினர்.

வரும் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் மணிரத்னமிடம், ஏன் கோலிவுட்டில் 1000 கோடி வசூல் செய்யும் படங்கள் வருவதில்லை என்று கேட்கப்பட்டிருக்கிறது. அப்போது பேசிய மணிரத்னம், “நாம் எதற்காக சினிமாவிற்கு வந்தோம். அதிக வசூல் செய்யும் படங்களை எடுக்க வேண்டும் என்று வந்தோமா? அல்லது நல்ல படங்களை கொடுக்க வந்தோமா? முன்பு ஒரு படம் வெளியாகும் போது பார்வையாளர்கள் அதன் தரத்தை மட்டுமே பார்ப்பார்கள். இப்போது எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது. இனி அது சினிமாவின் தரத்தை கெடுக்காது என்று நம்புகிறேன். என்னால் ஆயிரம் கோடிக்காக படம் எடுக்க முடியாது” என்று பேசினார்.

இதையும் படியுங்கள்:
"இந்த 5 பழக்கங்களை விட்டுத் தொலையுங்கள். வாழ்வில் வெற்றி நிச்சயம்!" சாணக்கிய நீதி சொல்வது என்ன?
Mani Ratnam

மணிரத்னத்தின் இந்த கருத்து, கலைக்கும் வணிகத்திற்கும் இடையிலான சமநிலையைக் குறித்த ஒரு ஆழமான கேள்வியை எழுப்புகிறது. 'பொன்னியின் செல்வன்' போன்ற பிரம்மாண்டப் படங்களை இயக்கிய மணிரத்னம், தனது படைப்புச் சுதந்திரத்தையும், கதையின் மையத்தையும் முக்கியமாகக் கருதுகிறார் என்பதை அவரது பேச்சு உணர்த்துகிறது. வசூல் சாதனைகள் ஒருபுறம் இருந்தாலும், ஒரு படைப்பாளியாக தனக்கு திருப்தியளிக்கும் திரைப்படங்களை உருவாக்குவதே தனது இலக்கு என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

தமிழ் சினிமா ரசிகர்கள், இயக்குநர் மணிரத்னத்தின் இந்த நேர்மையான கருத்தை வரவேற்றுள்ளனர். ஆயிரம் கோடி வசூல் என்பது ஒரு படத்தின் தரத்தை மட்டும் குறிக்காது என்பதையும், ஒரு சிறந்த கதை மற்றும் தரமான உருவாக்கம் என்பதே ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றிக்கு அடிப்படை என்பதையும் அவரது வார்த்தைகள் மீண்டும் வலியுறுத்துகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com