‘நடிப்பதையே நிறுத்திவிடுவேன்’ ஜூனியர் என்டிஆர் டென்ஷன்!

‘நடிப்பதையே நிறுத்திவிடுவேன்’ ஜூனியர் என்டிஆர் டென்ஷன்!

மீபத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் நடித்திருந்தனர். அந்தப் படத்தை ராஜமவுலி இயக்கி இருந்தார். ஆர்ஆர்ஆர் படம் வெளியாவதற்கு முன்பே ராம்சரண் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலும், தனது தந்தை சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்திலும் ஒப்புக்கொண்டு நடிக்கத் துவங்கி விட்டார்.

அதேசமயம், ‘ஜூனியர் என்டிஆர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளார்’ என்று அறிவிக்கப்பட்டாலும், அந்தப் படப்பிடிப்பு துவங்கப்படுவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை. ஆர்ஆர்ஆர் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து கோல்டன் குளோப் விருது மற்றும் ஆஸ்கர் விருது என பிரமோஷன் நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொண்டு வந்தார் ஜூனியர் என்டிஆர்.

சமீபத்தில் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் நந்தமூரி தாரக ரத்னாவின் எதிர்பாராத மறைவும் அவரை சற்று பாதித்தது. அந்த பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த ஜூனியர் என்டிஆர், சமீபத்தில் ரிலீசான ‘தாஸ் கா தம்கி’ என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் அவரிடம், ‘உங்களது அடுத்த படம் என்ன? எப்போது ரிலீஸ்?’ என்பது போன்ற கேள்விகளை தொடர்ந்து அவரிடம் கேட்டுக்கொண்ட கூச்சலிட்டபடி இருந்தனர். ஒரு கட்டத்தில் மிகவும் டென்ஷனான ஜூனியர் என்டிஆர், ‘இதேபோன்று நீங்கள் கூச்சல் போட்டுக் கேட்டுக்கொண்டே இருந்தால் நான் படங்களில் நடிப்பதையே நிறுத்தி விடுவேன்’ என்று கோபமாகக் கூறினார்.

அதைக் கேட்ட ரசிகர்கள் மட்டுமின்றி, அங்கே கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சற்று நேரத்தில் சகஜ நிலைக்குத் திரும்பிய ஜூனியர் என்டிஆர், ‘அப்படிப் படங்களில் நடிப்பதை நிறுத்தும் எண்ணம் தற்போதைக்கு எதுவும் இல்லை’ என்று கூறி அங்கு கூடியிருந்தோர்களின் மத்தியில் சகஜ நிலையை ஏற்படுத்தினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com