ரசிகர்கள் என்னை இப்படிதான் அழைப்பார்கள்.. ஆனால் கவலையில்லை.. ஜோதிகா பளீச் பதில்!

Jothika
Jothika

சினிமா துறையில் பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், அனைவரின் ஞாபகத்திற்கும் முதலில் வருவது சூர்யா ஜோதிகா தான். அப்படி அனைவரின் மனம் கவர்ந்த சினிமா ஸ்டார்கள் என்றே சொல்லலாம். குடும்ப சூழலில் பிஸியாக இருந்த ஜோதிகா பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது சமீப காலமாக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதுவும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி சமீபத்தில் இவரும் மம்முட்டியும் நடித்து வெளியான காதல் தி கோர் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இவர் தனியார் யூடியூபிற்கு அளித்த நேர்காணல் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களுக்காக ரொம்பவே உழைக்கிறேன். கதாநாயகிகள் இந்த ஃபீல்டில் 10 சதவீதம் அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை ரசிகர்களும் விரும்ப வேண்டும்.

பெரிய நடிகர்களை மட்டும் தூக்கி பிடித்தால் கதாநாயகிகள் எப்படி வளர முடியும். புதிய இயக்குநர்கள் மட்டுமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதுகிறார்கள். பெரிய இயக்குநர்கள் அப்படி செய்வதில்லை. பெரிய ஹீரோக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் எல்லாம் பெண்களை மையப்படுத்தி படங்கள் எடுக்கப்படுகின்றன

தமிழில் அப்படி இல்லாதது வருத்தமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு நாங்கள் திட்டமிட்டதால்தான் நடிப்பிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தேன். சினிமாவை தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கிறது. என்னிடம் வந்து சினிமா முக்கியமா குழந்தைகள் முக்கியமா என்று கேட்டால் குழந்தைகள்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். என் மீது ரசிகர்களுக்கு பாசம் இருந்தால் தமிழ்நாட்டு மருமகள் என்பார்கள். கோபம் வந்தால் ஹிந்திக்காரி என்பார்கள். ஆனால் கவலைப்படமாட்டேன் என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com