நடிகர் கமல்ஹாசனின் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் 90ஸ் முதல் நாயகனாக ஜொலித்து வருகிறார். தற்போதும் பல படங்கள் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் அவருக்கு பெரிய கம்பேக்காக இருந்தது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்ற இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம்.
நாயகன் மீண்டும் வரான் என்ற ஒற்றை வரியில் அனைவரையும் மெய்சிலிர்க்க செய்தார் கமல்ஹாசன். தற்போது இந்தியன் 2, கல்கி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ளார். மேலும், கமல் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கவிருந்த KH 233 படம் ட்ராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கமல்ஹாசனின் புதிய கூட்டணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் பிரசாந்த் நீலுடன் அடுத்த படத்தில் கைக்கோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் படம் மூலம் இந்தியளவில் பிரபலமான பிரசாந்த் நீல், தற்போது சலார் படத்தை இயக்கியுள்ளார். உலகம் முழுவதும் பலரையும் திரும்பி பார்க்க வைத்த கேஜிஎஃப் படத்தை தொடர்ந்து, சலார் படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனை வைத்து பிரசாந்த் நீல் தமிழில் படமெடுக்கவுள்ளதாகவும், அதில் கமல் மான்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கமல் - பிரசாந்த் நீல் கூட்டணி பற்றிய அப்டேட் கோலிவுட் இயக்குநர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ரசிகர்கள் கமலின் அடுத்த அவதாரத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.