கேஜிஎஃப் 3 திரை கதை தயார் இயக்குனர் கொடுத்த அப்டேட்!

கேஜிஎஃப் 3 திரை கதை தயார் இயக்குனர் கொடுத்த அப்டேட்!

ன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான யஷ் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான கே.ஜி.எஃப் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படம் இந்தியா முழுவதுமே முக்கிய பேசுபொருளாகவும் மாறியது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் கே ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கே ஜி எஃப் படத்தின் முதல் மற்றும் 2ம் பாகம் இரண்டும் இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் வசூலை ஈட்டி சாதனை படைத்ததை அடுத்து தயாரிப்பு நிறுவனம் 3ம் பாகத்தை எடுக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீலை தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கே ஜி எஃப் படத்தின் 3ம் பாகம் குறித்து படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் குறிப்பிட்டு இருப்பது. கேஜிஎஃப் இரண்டு பாகங்களினுடைய மிகப்பெரிய வெற்றியை அடுத்து 3ம் பாகம் இயக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. வசூலில் மட்டும் சாதனை படைக்காமல் இந்தியாவில் கேஜிஎஃப் திரைப்படம் மிகப்பெரிய பேசுபொருளாகவும் மாறியது.

இந்த நிலையில் கே ஜி எஃப் 3ம் பாகத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள் முடிவடைந்து இருக்கிறது. படப்பிடிப்பிற்கு தற்போது கதை தயாராக உள்ளது. இந்தப் படத்தை நான் இயக்குவேனா என்று தெரியாது. ஆனால் யஷ் கண்டிப்பாக நடிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.

கே ஜி எஃப் இரண்டாம் பாகத்தின் முடிவில் நடிகர் யஷ் கடலில் மூழ்கி இறப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கும். இந்த நிலையில் எப்படி 3ம் பாகத்தில் மீண்டும் யஷ் நடிப்பார் என்று கேள்வி கேஜிஎஃப் ரசிகர்கள் சமூக ஊடகத்தில் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இது படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com