மோடி ஜெயிப்பாரா? இமயமலை செல்லும் முன்பு ரஜினி கொடுத்த பதில்!

Rajini - Modi
Rajini - Modi

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு 5 நாட்களில் வெளியிடவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு செல்கிறார். அப்போது மோடி மீண்டும் வெற்றி பெறுவரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைபடத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அண்மையில் நடிகர் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கௌரவித்து இருந்தது. இதற்காக துபாய் சென்ற ரஜனிகாந்த் அங்குள்ள இந்து கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. சுமார் 2 வார கால ஓய்வுக்கு பின் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார். கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வதற்காக இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து இமயமலை புறப்பட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போது ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் தரிசனம் செய்ய உள்ளேன். வேட்டையன் படம் சிறப்பாக வந்துள்ளது" என்று தெரிவித்தார்.

அப்போது மீண்டும் மோடி வெற்றிபெறுவார் என்று நினைக்கிறீர்களா என்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "மன்னிக்கவும், அரசியல் கேள்வி வேண்டாம்" என்று கூறினார். தொடர்ந்து இசை பெரியதா அல்லது கவிதை பெரியதா என ஒரு போட்டி தமிழ் சினிமாவில் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, "நோ கமெண்ட்ஸ்" என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.

இதையும் படியுங்கள்:
ராயன் பட அப்டேட் கொடுத்த தனுஷ்... என்ன தெரியுமா?
Rajini - Modi

ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த், கரோனா பரவல் காரணமாக சில வருடங்கள் அங்கு செல்லாமல் இருந்தார். கடந்த வருடம் தனது நண்பர்களுடன் சென்றார். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட்டார். அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாயின. இந்த வருடமும் அவர் இமயமலை செல்ல இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் சென்னைக்கு நேற்று திரும்பிய ரஜினிகாந்த், இன்று காலை தனது நண்பர்களுடன் இமயமலை செல்கிறார். அங்கு பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட இருக்கிறார். அடுத்த மாதம் 3 அல்லது 4-ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com