மீண்டும் இணையும் ‘பூஜை’ கூட்டணி..!

மீண்டும் இணையும் ‘பூஜை’ கூட்டணி..!
Published on

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ‘லத்தி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனத்தை பெறவில்லை. அதுபோல் அதற்கு முன்பும் விஷால் நடிப்பில் வெளியான படங்களும்  பெரிதளவு பேசப்படவில்லை.  இதனால் மீண்டும் ஒரு பெரிய ஹிட் படத்தை கொடுவேண்டும் என்ற நோக்கில் விஷால் இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி”  எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விஷால் இயக்குனர் ஹரி  இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான தாமிரபரணி , பூஜை ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று விஷாலின் மார்க்கெட்டை உயர்த்தியது.

‘பூஜை’ படத்தின் வெற்றிக்கு பிறகு 8 வருடங்கள் கழித்து விஷால் மற்றும் ஹரி கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. 

அதிரடி இயக்குனரான ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பூஜை’. குடும்ப கதைக்களத்தை கொண்டு ஆக்‌ஷன் அதிரடி திரைப்படமாக உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராதிகா, ஸ்ருரி ஹாசன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகர் விஷாலுக்கு நல்ல ஓபனிங் கொடுத்த படமாக இந்த படம் அமைந்தது. 

இந்த படத்தின் வெற்றியையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இதற்காக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கசிந்தள்ளது. கண்டிப்பாக இது விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com