சூரரைப் போற்று இந்தி ரீமேக்: பாலிவுட்டில் எண்டர் ஆகிறார் நடிகர் சூர்யா!

 சூரரைப் போற்று இந்தி ரீமேக்: பாலிவுட்டில் எண்டர் ஆகிறார் நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் ஆக தயாரிக்கிற்து. இதன்மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக முதன்முதலாக அடியெடுத்து வைக்கிறார் நடிகர் சூர்யா. 'சூரரை போற்று' படத்தின் இந்தி பதிப்பின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் இப்படத்தின் இந்தி பதிப்பின் நாயகனாக அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'சூரரை போற்று' இந்தி ரீமேக் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப் படுவதாக சொல்லப்படுகிற்து. இப்படத்தை ஜோதிகா, சூர்யா ஆகியோருடன் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ராவும் இணைந்து தயாரிக்கிறார். இதில் ராஜசேகர் பாண்டியன் மற்றும் சிக்கா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இனணகிறார்கள்.

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் இயக்குநர் சுதா கொங்கரா. ஒளிப்பதிவு நிகேத் பொம்மி. இசையமைப்பு  ஜீ. வி. பிரகாஷ் குமார் மேலும் படத் தொகுப்பு சதீஷ் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை பிந்தியா மற்றும் அரவிந்த் மேற்கொள்கிறார்கள்.

'சூரரைப்போற்று' இந்தி ரீமேக் தொடக்கவிழாவில் கலந்துக் கொள்வதற்காக, கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் படபிடிப்பிலிருந்து சூர்யா மும்பைக்குச் சென்றார் என்பது குரிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com