"பெண்கள் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும்" விமர்சனங்களுக்கு வரலட்சுமி சரத்குமார் பதிலடி!

actress varalakshmi sarathkumar marriage
actress varalakshmi sarathkumar marriage

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது திருமண விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னணி நடிகராக வலம் வரும் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தனது அடுத்தகட்ட வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கவுள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'போடா போடி' படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தமிழ்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்து போல்ட் கதாபாத்திரங்களை எடுத்து நடித்து அசத்தி வந்தார். இவருக்கான வில்லி கதாபாத்திரம் பக்காவாக பொருந்த அனைத்து மொழி படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், 14 வருடங்கள் பழகிய நண்பரும், தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் என்பவரை தான் கரம்பிடிக்கவுள்ளார். இவர்களின் நிச்சயதாரத்தம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், பலரும் இவர் ஏன் 2வது திருமணம் செய்கிறார் என பேசி வந்தனர்.

இதையும் படியுங்கள்:
ஏ. ஆர். முருகதாஸுடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
actress varalakshmi sarathkumar marriage

இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதாரத்த வீடியோவை பகிர்ந்து, அதில், மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று நான் எப்போதும் கவலைப்பட மாட்டேன், அதுபோலத்தான் பெண்கள் எப்பவும் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். அதோடு உங்களுக்காக வாழுங்கள் நீங்கள் இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்கிறவர்கள் யாரும் உங்கள் வாழ்க்கை முழுவதும் பயணிக்க மாட்டார்கள். நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கைக்கு துணையாக நிற்கப் போகிறீர்கள். அதனால் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை தைரியமாக செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பலரும் லைக் செய்து வருகின்றனர். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com