Jananayagan |விஜய்யின் ஜனநாயகன் படத்தின் கதை இதுதானா..? லீக்கான ஸ்டோரி..!

Jananayagan movie
Jananayagan movie
Published on

நடிகர் விஜய் தளபதி விஜய்யாக மாறி சிறு குழந்தைகள், முதியவர்கள் வரை அனைத்து வகையான ரசிகர்கள் பட்டாளத்தையும் சம்பாதித்துள்ளார். வருடத்திற்கு ஒன்று என வெளியே வரும் இவரின் படத்தை பார்க்க ரசிகர்கள் பல நாட்களாக காத்து கொண்டிருப்பார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில் நடிகர் விஜய் தற்போது கட்சி தொடங்கியுள்ளதால் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என கட்சிக்கு பெயரிட்டு கட்சி கூட்டம், மாநாட்டை நடத்தி வருகிறார். இவரின் கூட்டத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைகடலென திரண்டு வருகின்றனர். என்னதான் அரசியலில் தினசரி பார்த்தாலும் கூட சினிமா மோகம் குறையவே குறையாது. அந்த வகையில் இவரின் கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள நிலையில், இதன் 2 பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'ஜனநாயகன்' திரைப்படத்தின் மையக் கரு, சித்தாந்தங்களின் மோதல் (Clash of Ideologies) பற்றிப் பேசுகிறது. கதைச்சுருக்கத்தின் முதல் வரியே இதைத் தெளிவுபடுத்துகிறது: "ஒருவர் மக்களுக்காக நிற்கிறார், மற்றொருவர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதில் ஊட்டம் பெறுகிறார்." இந்த இருவேறு சித்தாந்தங்களை உடைய தலைவர்களுக்கு இடையே தான் பிரதான மோதல் நடக்கிறது. இது, ரசிகர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருப்பதற்கான அறிகுறியாகும்.

இந்த இரு எதிர்த் துருவங்களின் பாதைகளும், இதற்கு முன்னரே ஒரு முறை மோதி இருக்கின்றன. அதாவது, கதை நிகழும் காலத்துக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இவர்களுக்கு இடையே ஒரு மோதல் நடந்திருக்கிறது. இந்தக் கடந்த கால மோதலின் தாக்கம் தான், மீண்டும் இவர்களை நிகழ்காலத்தில் சந்திக்க வைக்கிறது. இதுவே, படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு அழுத்தமான சஸ்பென்ஸ் உணர்வைத் தூண்டுகிறது.

நீண்ட ஆண்டுகள் கழித்து, ஒரு குழந்தையின் மௌனமான பயம் தான், இந்தப் பழைய மோதலை மீண்டும் கிளறிவிடுகிறது. அந்தக் குழந்தையின் அச்சம், சாதாரண விஷயமல்ல; அது கடந்த காலத்தின் காயங்களை மீண்டும் திறந்து, சம்பவங்களை நிகழ்காலத்திற்கு இழுத்து வருகிறது. இதுதான், கதையின் திருப்புமுனையாக அமையக்கூடும். இந்தப் பின்னணியின் காரணமாக, ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி களத்தில் இறங்குகிறார். இவர், அந்தக் குழந்தையின் அச்சத்திற்கு நீதி கிடைக்கப் போராடுகிறார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இந்த படத்திற்கு அதிக ஹைப் இருப்பதையும் தாண்டி விஜய்யின் அரசியல் களத்திற்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com