யானையும் குழந்தையும்

யானையும் குழந்தையும்
gokulam strip
gokulam strip

காடு பெருங்காடு – யானை புலி

காட்சி தரும் காடு

நீடு நிழல் கொடுத்தே – மரங்களும்

நின் றிருக்கும் காடு!

ச்சை மரத்தடியில் – சின்னஞ்சிறு

பாலன் படுத் திருந்தான்

குச்சி விற கொடிப்பாள் – அவன்தாய்

கூப்பிடு தூரத்திலே.

ண்ணயர் பாலகனின் – அருகிலோர்

காட்டு மத யானை

மண்ணைக் கிளறியது! – மதத்தொடு

வாலை முறுக்கி யது!

தாயும் பதறுகிறாள் – ஐயோவென்று

தவித்துப் புலம்புகிறாள்

வாயும் வயிற்றெரியக் – கண்ணீர்விட்டு

வாய்விட் டலறுகிறாள்.

ச்சை இளங்குழந்தை – தலைமயிர்

பாடிவரும் காற்றால்

நொச்சித் தளிர்போலே – அசைந்ததை

நோக்கிற்று யானையுமே.

கைகளைத் தட்டுகிறான் – குழந்தை

கால்களில் துள்ளுகிறான்

பைய நடக்கிறது – யானை அவன்

பக்கம் வருகிறது.

தீங்கெதும் செய்யவில்லை – குழந்தையைத்

தீண்டி மிதிக்கவில்லை!

பாங்குடன் அப்புறத்தே – நகர்ந்தது

பாசம் ததும்பிடவே,

றறி வில்லாத – மிருகமும்

அன்பினைக் காட்டுதடா!

மாறிவரும் உலகில் – மனிதா

வாழத் தெரிந்து கொள்வாய்!

 - சக்திக்கனல்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com