#Breaking: பல்லக்கில் தருமபுரம் ஆதீனம்; நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி!

#Breaking: பல்லக்கில் தருமபுரம் ஆதீனம்; நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி!

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்வது வழக்கம். இவ்வாறு தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் (மே 2) உத்தரவிட்டார். இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்நிலையில்,மதுரை ஆதினம் தெரிவித்ததாவது;

தருமபுர ஆதீன மடத்துக்கு அண்மையில் தமிழக ஆளுநர் சென்றதே தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம். ஆனால்  என் உயிரே போனாலும் பரவாயில்லை.. நானே சென்று தருமபுர ஆதீனம் அமர்ந்த பல்லக்கை சுமப்பேன்.

-இவ்வாறு மதுரை ஆதீனம் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் குறித்து , கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்வில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிக்கை விடுத்தார்.  இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். மேலும்,மே 22-ம் தேதிதான் பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. எனவே அதற்குள் தருமபுர ஆதீனத்துடன் முதல்வர் ஸ்டாலின் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்.

-இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com