ஒரு நிருபரின் டைரி – 28.– எஸ். சந்திரமெளலி.பாபா – 75.கல்கி பத்திரிக்கை காஞ்சி பரமாச்சார்யாருக்கு முக்கியத்துவம் கொடுத்தது போலவே மிகுந்த முக்கியத்துவம் கொடுத்த இன்னொரு மகான் "புட்டபர்த்தி சத்ய சாய் பாபா." அவரைப் பற்றிய தொடர்களும், கட்டுரைகளும் கல்கியில் ஏராளமாக வெளிவந்து வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்றிருக்கின்றன. சாய்பாபா அவதார தினத்தையொட்டி கல்கியில் சிறப்புக் கட்டுரைகளும், சிறப்பிதழ்களும் வெளியிடுவது வழக்கம்தான். சத்ய சாயி பக்தர்களின் சேவைகளைப் பற்றியும் அவ்வப்போது பேட்டி கண்டு எழுதி இருக்கிறேன். 2000ஆம் ஆண்டில் பாபாவின் 75-வது பிறந்த நாளையொட்டி, கல்கியில் "பாபா 75" என ஒரு சிறப்பிதழ் வெளியிட முடிவானபோது, ஆசிரியர், "புட்டபர்த்திக்கு நேரடியாக சென்று, பலதரப்பட்டவர்களிடம் பேசி, பல்வேறு விதமான தகவல்களையும் சேகரித்து அவற்றை சிறப்பிதழில் இடம்பெறச்செய்யலாம்" என்று சொல்லவே, புகைப்படக் கலைஞர் யோகாவுடன் நான் புட்டபர்த்திக்குப் புறப்பட்டேன்..புட்டபர்த்தி பஸ் நிலையத்தில் இறங்கியதுமே ஒரு வித்தியாசமான காட்சி கண்ணில் பட்டது. அங்கே டிராலிகள் சகிதம் வெள்ளை சீருடையில் சத்ய சாயி பல்கலைக்கழக மாணவர் குழு ஒன்று காத்திருந்தது. பஸ்ஸில் இருந்து இறங்கும் முதியவர்கள், மாற்றுத் திறனாளி பயணிகள் கொண்டுவரும் லக்கேஜ்களை வாங்கி, டிராலிகளில் வைத்து, கூடவே தள்ளிக்கொண்டு நடந்து வருகிறார்கள். அவரவர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளஇடம் வரை அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, லக்கேஜ்களையும் எடுத்து வைத்துவிட்டுச் செல்கிறார்கள்..மூன்று நாட்கள் புட்டபர்த்தியில் இருந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். அங்கிருந்தவர்களிடம் பேசியபோது ஏராளமான புதிய தகவல்களைத் தெரிந்துகொண்டேன். பாபாவின் பக்தர்கள், பாபாவைப் பற்றி பேசும்போது எந்த அளவுக்கு உணர்ச்சி பொங்க, மெய்சிலிர்த்துப் பேசுகிறார்கள் என்பதை நேரில் கண்டு வியந்தேன். சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ளவர்களும், அவர்தம் குடும்பத்தினரும் புட்டபர்த்திக்கு வந்து தங்கள் படிப்பு, வசதி, சம்பாத்தியம், அந்தஸ்த்து எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு சாதாரணமான வாலண்டியராக பக்தி சிரத்தையோடு அங்கே சேவை செய்கிறார்கள் என்பதை நான் கண்கூடாகப் பார்த்து பிரமித்தேன். உதாரணமாக, பாபாவின் பக்தர்களுக்காக வினியோகம் செய்யப்படுவதற்காக ஆயிரக்கணக்கான லட்டுகள் ஒரு மண்டபத்தில் தயாராகிக் கொண்டிருந்தன. அங்கே ஐம்பது, அறுபது பக்தர்கள்தான் லட்டு பிடிக்கும் பணியை செய்துகொண்டிருந்தார்கள். அந்த பக்தர்களில் மிக எளிமையாகத் தோற்றமளித்த ஒரு பெண்மணியிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தின் தலைவரது மனைவி என்றும், அவர் பல்லாண்டுகளாக புட்டபர்த்திக்கு வந்து சில நாட்கள் தங்கி சேவை செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் என்றும் தெரிய வந்தது. இன்னொரு இடத்தில் பகவானின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக ஒரு மைதானம் தயாராகிக் கொண்டிருந்தது. வெள்ளை உடையில் சாய் சமிதி சேவகர் ஒருவர் மண்வெட்டி பிடித்து புற்களை வெட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் பேசியபோது, அவர் பப்ளிக் செக்டார் வங்கி ஒன்றின் ஜெனரல் மேனேஜர் என்று தெரிய வந்தது. ஏ/சி அறையில் அமர்ந்து உத்தியோகம் பார்க்கிறவரிடம் மண்வெட்டி பிடிக்கும் அனுபவம் பற்றிக் கேட்டபோது, சாய் ராம்!" என்றார் புளகாங்கியத்துடன்..புட்டபர்த்தியில் எங்கெங்குகாணினும் சாய் சமிதி வாலண்டியர்கள்தான்! அதுவும் 75வது ஜெயந்தி கொண்டாட்டம் தொடர்பான பணிகளைச் செய்ய ஆயிரக்கணக்கில் அவர்கள் குவிந்திருந்தார்கள். அவர்கள் மத்தியில் ஹலோ, வணக்கம், குட் மார்னிங், குட் ஈவினிங், குட் நைட் போன்ற சொற்களுக்கெல்லாம் அர்த்தமில்லை. "சாய்ராம்" என்று மட்டுமே அவர்களின் உதடுகள் உச்சரிக்கும். நேரத்தைப் பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடுகிறது. ஒவ்வொருவரும், தினமும் நூற்றுக்கணக்கான தடவைகள் உச்சரிக்கும் ஒரு வார்த்தை "சாய்ராம்!" ஒருவரது பெயர் என்னவாக இருந்தாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் வாஞ்சையோடு அழைத்துக் கொள்ளும் ஒரே பெயர் "சாய்ராம்!".பாபாவின் அப்பா பெயர் பெத்த வேங்கம ராஜு. அம்மா பெயர் ஈஸ்வரம்மா. 1972ல் பாபாவின் அம்மா மறைந்தார். அப்பா 1990ல். பிரஷாந்தி நிலையத்துக்கு எதிரில் இருக்கும் நந்தவனத்தில்தான் இருவரது சமாதிகளும் அமைந்துள்ளன. தீபங்களும், மெழுகுவர்த்தியும், ஊதுவத்திகளும் நிறைந்த அந்த இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தால், மனசுக்கு அமைதி கிடைக்கிறது. ஆண்டுதோறும் தனது பிறந்த நாளன்று பாபா அந்த சமாதிகளுக்கு வந்து தனது பெற்றோர்களை வணங்கிச் செல்வது வழக்கம் என்று என்னை அங்கே அழைத்துக் கொண்டு போய்க் காட்டிய சாய் பக்தர் கூறினார். பிரசாந்தி நிலையத்தில் இருந்து அரைக்கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புட்டபர்த்தி கிராமம். அங்கே உள்ள ஒரு தெருவின் பெயர்: கர்ணம் தெரு. அங்கே 2/320 என்ற எண் கொண்ட வீட்டில்தான் பாபா பிறந்தார். 1973ல், பாபாவின் விருப்பப்படி, அந்த இடத்தில் பளிங்கு கல்லில் செய்யப்பட்ட சிவன் உருவச்சிலை கொண்ட ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டது. அந்தத் தெரு இப்போது சிவாலயம் தெரு என அழைக்கப்படுகிறது. அந்த கோயிலுக்கு சில வீடுகள் தள்ளி, ஒரு சாதாரணமான வீடு. அங்கேதான் பாபாவின் உடன் பிறந்த சகோதரர் வசித்து வருவதாகவும் அந்த பக்தர் கூறினார்..சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரிக்குப் போனபோது, ஆச்சர்யத்தின் கிளைமேக்சுக்குப் போனேன். பொதுவாக இன்றைய கமர்ஷியல் மருத்துவ உலகில் ஒருவருக்கு நோய் என்று ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தால், அவரிடமிருந்து எவ்வளவு பணம் பறிக்கலாம் என்று ஆஸ்பத்திரிகள் கணக்குப் போடுவது சகஜம். ஆனால், சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிடி டாக்டர் ஒருவரிடம் பேசியபோது : எங்கள் ஆஸ்பத்திரிக்கு நோயாளி, நோயை மட்டும் கொண்டுவந்தால் போதும், பணம் தேவையில்லை" என்றார். பாபாவின் அறுபதாவது பிறந்தநாளின்போது ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனை இது. புறநோயாளிகளுக்கும், அக நோயாளிகளுக்கும் அருமையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த மருத்துவமனையில். நோயாளிகளில் கூட இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பாக்கியம் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்!.கல்கி சிறப்பிதழுக்காக பாபாவின் பொன்மொழிகள் புத்தகத்தைப் படித்து, சிலவற்றைத் தொகுத்துக் கொடுத்தேன். அவற்றில் அற்புதமான சில பொன் மொழிகள் இவை:.'தேன்' என்று சொன்னால் இனிக்காது; சுவைக்க வேண்டும்; 'சேவை' என்று சொன்னால் போதாது; செய்ய வேண்டும்.இல்லாததற்கு ஏங்காமல், உள்ளதைக் கொண்டு மனம் மகிழ்க!இன்றைய உலகம் அமைதியையும், அணுகுண்டையும் விரும்புகிறது! ஆனால், ஒன்று இருந்தால் ஒன்று மறைந்துவிடும்!இரும்பு நீருடன் சேர்ந்தால் துறு பிடிக்கும்; நெருப்புடன் சேர்ந்தால் தூய்மையாகும். நாமும் சேருமிடத்துக்கேற்ப மாறுவோம்.முதன் முதலில் சந்திர மண்டலத்துக்குப் போக உதவியது தன்னம்பிக்கை என்ற விண்கலமே.ஆயிரம் பருக்கைகளை அள்ளி உண்கிறோம். அதில் ஒரு கல் இருந்தாலும், அதையே பெரிதாய் சொல்கிறோம். ஆயிரம் இன்பங்களுக்கு இடையே வாழ்க்கையில் ஒரு துன்பம் வந்தாலும், வாழ்க்கையே அவதி என அலட்டிக் கொள்கிறோம்..புட்டபர்த்தியில் நான் சந்தித்து பேட்டிகண்ட ஒரு சுவாரசியமான மனிதர் அனில்குமார் காமராஜு. இவர், சத்யசாயி பல்கலைக்கழகத்தில் பயோ சயின்ஸ் துறை பேராசிரியர். நான் அவரை சந்தித்தது பயோசயின்ஸ் பற்றி பேசுவதற்காக இல்லை. அப்புறம்? பாபாவின் சொற்பொழிவுகள் பெரும்பாலும் தெலுங்கில்தான் இருக்கும். அவசியமானபோது அவற்றை, லைவ் ஆக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியை பல்லாண்டுகளாக செய்து வந்தவர் அவர்! பேரா. காமராஜுவை அவரது வீட்டில் சந்தித்து உரையாடினேன்.."பாபாவின் சொற்பொழிவுகளை மொழிபெயர்ப்பதில் என் பணி ஒலிப்பெருக்கியைப் போன்றதுதான். அதில் என் தனிப்பட்ட பங்களிப்பு ஏதுமில்லை; பாபாவே முதலில் தெலுங்கில் பேசிவிட்டு, அதன் பின் எனது உதடுகள் மூலமாக ஆங்கிலத்தில் பேசுவதாகவே நான் நினைக்கிறேன்! இருந்தாலும் அது எனக்குக் கிடைத்திருக்கும் பெரும் பாக்கியம். சில சமயங்களில் பகவானின் தெலுங்கு சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்கள் கிடைக்காமல் நான் தடுமாறும்போது, பகவானே மின்னல் போல எனக்கு சரியான வார்த்தைகளை எடுத்துக் கொடுப்பார்" என்று நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டார்.."முதல் தடவையாக மொழி பெயர்த்த அனுபவம் எப்படி இருந்தது?" என்று கேட்டபோது, "ஒரு முறை அவர் கொடைகானலுக்குச் சென்றிருந்தார். அங்கேதான் எனக்கு முதல் தடவை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று பாபாவின் தீவிர பக்தனான நான் ரொம்ப நெகிழ்ந்து போயிருந்தேன். லேசான பதட்டம் இருந்தது. அன்று பாபா பயன்படுத்திய சாதாரணமான "தெகி" என்ற தெலுங்கு வார்த்தைக்கு இணையான சொல் எனக்கு அந்தக் கணத்தில் கிடைக்கவில்லை. உடனே பாபா, "கட்" (வெட்டு) என்று எடுத்துக் கொடுத்தார். பகவானின் உரையைக் கேட்கும் பக்தர்களைப் போலவே, நானும் அவர் சொல்வதைக் கேட்கிறபோது உணர்ச்சிவசப்பட்டுப் போவேன். ஆனால், எனக்கு அதை மொழிபெயர்க்கும் பொறுப்பும் இருப்பதால், அந்த சிறு தடுமாற்றம் சில சமயங்களில் தவிர்க்க முடியாதது" என்று வெகு யதார்த்தமாகக் குறிப்பிட்டார்..அவர் சொன்ன ஒரு சுவையான சம்பவம்: ஒரு முறை நல்ல ஆங்கிலப் புலமை கொண்ட ஒரு அறிஞர் பாபாவை சந்தித்தார். அவரிடம் பாபா, " வாட் ஈஸ் லவ்?" என்று ஒரு கேள்வியைக் கேட்டார். ஆனால், அவரால் சட்டென்று அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், பாபாவே, "லவ் ஈஸ் செல்ஃப்லெஸ்னஸ்" என்று பதில் அளித்தார். அடுத்து, அவரிடம், " வாட் ஈஸ் செல்ஃப்?" என்ற கேள்வியைக் கேட்டார். அவரால் அந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. பாபாவே அதற்கும் விளக்கம் கொடுத்தார்:"ஸெல்ஃப் ஈஸ் லவ்லெஸ்னஸ்" எதற்காக இதை நான் குறிப்பிடுகிறேன் என்றால், பாபா, முறைப்படி கல்வி கற்றவர் இல்லை. ஆனால், அவரது ஆங்கில மொழிப்புலமை அபாரமானது..வழக்கம் போல, "உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்?" என்ற இதழியலின் புராதனகாலத்து கேள்வியையும் நான் அவரிடம் கேட்கத் தவறவில்லை. ஆனால், அவர் சொன்ன பதில் அருமை. 1975ஆம் வருடம், ரோட்டரி பவுண்டேஷன் சார்பில் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரை ஆறுவார கால பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு அனுப்ப இருந்தார்கள். நானும் அதற்கு விண்ணப்பித்திருந்தேன். நேர்முகத் தேர்வு நடந்தது. அதில் பலவிதமான கேள்விகளை என்னிடம் கேட்டார்கள். அத்தனை கேள்விகளுக்கும் டக் டக் என்றும், மிக விரிவாகவும் பதிலளித்தேன். இந்தியாவின் ஒரே பிரதிநிதியாக என்னை தேர்வு செய்தார்கள். ஆறு வார காலப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, நிறைய புது விஷயங்கள் கற்றுக் கொண்டு இந்தியா திரும்பினேன். தேர்வுக்குழுவினரது கேள்விகளுக்கெல்லாம் மிக சிறப்பாக நான் பதில் சொன்னதன் ரகசியம் என்ன தெரியுமா? அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நான் கேட்ட, மொழி பெயர்த்த பகவானின் சொற்பொழிவுகளிலேயே பதில்கள் இருந்ததுதான்!.விடைபெறும்போது அவர் சொன்ன வார்த்தைகள்: பகவானுடன் இருப்பதும், அவருக்குப் பணிபுரிவதும் ஒரு வகையில் நெருப்பில் இருப்பது போல, கத்தி மீது நடப்பது போன்ற சவால்தான்! வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பகவானுடனான நெருக்கத்தை பறைசாற்றிக் கொள்பவர்களுக்கும், அதை சுய லாபத்துக்கோ, வர்த்தக ரீதியிலோ பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு அங்கே இடமில்லை" (நம் ஊர் அரசியல் அல்லக்கைகளின் அலம்பல்களை நினைத்தபோது சிரிப்புதான் வருகிறது).புட்டபர்த்தி போய்வந்து, பாபா 75 சிறப்பிதழ் அமர்க்களமாக வெளியானது. இதழ் வெளியான வியாழன் அன்று மாலை ஒரு டெலிபோன் வந்தது. மறுமுனையில் ஆசிரியர் கல்கி ராஜேந்திரன் சாரின் மனைவி திருமதி விஜயா ராஜேந்திரன். "பாபா கல்கி படிச்சேன்! புட்டபர்த்திக்கே போய்விட்டு வந்து ரொம்ப நன்னா எழுதி இருக்கீங்க! பாபா அருள் உங்களுக்கு பரிபூரணமா கிடைக்கும்!" என்றார். அவரது வார்த்தைகளைக் கேட்க எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அடுத்து நடந்ததுதான் நான் சற்றும் எதிர்பாராதது. "அம்மா உங்ககிட்ட ரெண்டு வார்த்தை பேசணுமாம்!" என்று கூறினார். அடுத்து பேசியவர் எம்.எஸ். அம்மா. " பாபா ஸ்பெஷல் ரொம்ப நன்னா இருக்கு! எனக்கு பரமாச்சார்யாளும், பாபாவும் ரெண்டு கண்கள்!" என்றார் அந்த இசைப் பேரரசி. அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை சொல்ல இன்று வரை எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை..(தொடரும்)
ஒரு நிருபரின் டைரி – 28.– எஸ். சந்திரமெளலி.பாபா – 75.கல்கி பத்திரிக்கை காஞ்சி பரமாச்சார்யாருக்கு முக்கியத்துவம் கொடுத்தது போலவே மிகுந்த முக்கியத்துவம் கொடுத்த இன்னொரு மகான் "புட்டபர்த்தி சத்ய சாய் பாபா." அவரைப் பற்றிய தொடர்களும், கட்டுரைகளும் கல்கியில் ஏராளமாக வெளிவந்து வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்றிருக்கின்றன. சாய்பாபா அவதார தினத்தையொட்டி கல்கியில் சிறப்புக் கட்டுரைகளும், சிறப்பிதழ்களும் வெளியிடுவது வழக்கம்தான். சத்ய சாயி பக்தர்களின் சேவைகளைப் பற்றியும் அவ்வப்போது பேட்டி கண்டு எழுதி இருக்கிறேன். 2000ஆம் ஆண்டில் பாபாவின் 75-வது பிறந்த நாளையொட்டி, கல்கியில் "பாபா 75" என ஒரு சிறப்பிதழ் வெளியிட முடிவானபோது, ஆசிரியர், "புட்டபர்த்திக்கு நேரடியாக சென்று, பலதரப்பட்டவர்களிடம் பேசி, பல்வேறு விதமான தகவல்களையும் சேகரித்து அவற்றை சிறப்பிதழில் இடம்பெறச்செய்யலாம்" என்று சொல்லவே, புகைப்படக் கலைஞர் யோகாவுடன் நான் புட்டபர்த்திக்குப் புறப்பட்டேன்..புட்டபர்த்தி பஸ் நிலையத்தில் இறங்கியதுமே ஒரு வித்தியாசமான காட்சி கண்ணில் பட்டது. அங்கே டிராலிகள் சகிதம் வெள்ளை சீருடையில் சத்ய சாயி பல்கலைக்கழக மாணவர் குழு ஒன்று காத்திருந்தது. பஸ்ஸில் இருந்து இறங்கும் முதியவர்கள், மாற்றுத் திறனாளி பயணிகள் கொண்டுவரும் லக்கேஜ்களை வாங்கி, டிராலிகளில் வைத்து, கூடவே தள்ளிக்கொண்டு நடந்து வருகிறார்கள். அவரவர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளஇடம் வரை அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, லக்கேஜ்களையும் எடுத்து வைத்துவிட்டுச் செல்கிறார்கள்..மூன்று நாட்கள் புட்டபர்த்தியில் இருந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். அங்கிருந்தவர்களிடம் பேசியபோது ஏராளமான புதிய தகவல்களைத் தெரிந்துகொண்டேன். பாபாவின் பக்தர்கள், பாபாவைப் பற்றி பேசும்போது எந்த அளவுக்கு உணர்ச்சி பொங்க, மெய்சிலிர்த்துப் பேசுகிறார்கள் என்பதை நேரில் கண்டு வியந்தேன். சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ளவர்களும், அவர்தம் குடும்பத்தினரும் புட்டபர்த்திக்கு வந்து தங்கள் படிப்பு, வசதி, சம்பாத்தியம், அந்தஸ்த்து எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு சாதாரணமான வாலண்டியராக பக்தி சிரத்தையோடு அங்கே சேவை செய்கிறார்கள் என்பதை நான் கண்கூடாகப் பார்த்து பிரமித்தேன். உதாரணமாக, பாபாவின் பக்தர்களுக்காக வினியோகம் செய்யப்படுவதற்காக ஆயிரக்கணக்கான லட்டுகள் ஒரு மண்டபத்தில் தயாராகிக் கொண்டிருந்தன. அங்கே ஐம்பது, அறுபது பக்தர்கள்தான் லட்டு பிடிக்கும் பணியை செய்துகொண்டிருந்தார்கள். அந்த பக்தர்களில் மிக எளிமையாகத் தோற்றமளித்த ஒரு பெண்மணியிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தின் தலைவரது மனைவி என்றும், அவர் பல்லாண்டுகளாக புட்டபர்த்திக்கு வந்து சில நாட்கள் தங்கி சேவை செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் என்றும் தெரிய வந்தது. இன்னொரு இடத்தில் பகவானின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக ஒரு மைதானம் தயாராகிக் கொண்டிருந்தது. வெள்ளை உடையில் சாய் சமிதி சேவகர் ஒருவர் மண்வெட்டி பிடித்து புற்களை வெட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் பேசியபோது, அவர் பப்ளிக் செக்டார் வங்கி ஒன்றின் ஜெனரல் மேனேஜர் என்று தெரிய வந்தது. ஏ/சி அறையில் அமர்ந்து உத்தியோகம் பார்க்கிறவரிடம் மண்வெட்டி பிடிக்கும் அனுபவம் பற்றிக் கேட்டபோது, சாய் ராம்!" என்றார் புளகாங்கியத்துடன்..புட்டபர்த்தியில் எங்கெங்குகாணினும் சாய் சமிதி வாலண்டியர்கள்தான்! அதுவும் 75வது ஜெயந்தி கொண்டாட்டம் தொடர்பான பணிகளைச் செய்ய ஆயிரக்கணக்கில் அவர்கள் குவிந்திருந்தார்கள். அவர்கள் மத்தியில் ஹலோ, வணக்கம், குட் மார்னிங், குட் ஈவினிங், குட் நைட் போன்ற சொற்களுக்கெல்லாம் அர்த்தமில்லை. "சாய்ராம்" என்று மட்டுமே அவர்களின் உதடுகள் உச்சரிக்கும். நேரத்தைப் பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடுகிறது. ஒவ்வொருவரும், தினமும் நூற்றுக்கணக்கான தடவைகள் உச்சரிக்கும் ஒரு வார்த்தை "சாய்ராம்!" ஒருவரது பெயர் என்னவாக இருந்தாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் வாஞ்சையோடு அழைத்துக் கொள்ளும் ஒரே பெயர் "சாய்ராம்!".பாபாவின் அப்பா பெயர் பெத்த வேங்கம ராஜு. அம்மா பெயர் ஈஸ்வரம்மா. 1972ல் பாபாவின் அம்மா மறைந்தார். அப்பா 1990ல். பிரஷாந்தி நிலையத்துக்கு எதிரில் இருக்கும் நந்தவனத்தில்தான் இருவரது சமாதிகளும் அமைந்துள்ளன. தீபங்களும், மெழுகுவர்த்தியும், ஊதுவத்திகளும் நிறைந்த அந்த இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தால், மனசுக்கு அமைதி கிடைக்கிறது. ஆண்டுதோறும் தனது பிறந்த நாளன்று பாபா அந்த சமாதிகளுக்கு வந்து தனது பெற்றோர்களை வணங்கிச் செல்வது வழக்கம் என்று என்னை அங்கே அழைத்துக் கொண்டு போய்க் காட்டிய சாய் பக்தர் கூறினார். பிரசாந்தி நிலையத்தில் இருந்து அரைக்கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புட்டபர்த்தி கிராமம். அங்கே உள்ள ஒரு தெருவின் பெயர்: கர்ணம் தெரு. அங்கே 2/320 என்ற எண் கொண்ட வீட்டில்தான் பாபா பிறந்தார். 1973ல், பாபாவின் விருப்பப்படி, அந்த இடத்தில் பளிங்கு கல்லில் செய்யப்பட்ட சிவன் உருவச்சிலை கொண்ட ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டது. அந்தத் தெரு இப்போது சிவாலயம் தெரு என அழைக்கப்படுகிறது. அந்த கோயிலுக்கு சில வீடுகள் தள்ளி, ஒரு சாதாரணமான வீடு. அங்கேதான் பாபாவின் உடன் பிறந்த சகோதரர் வசித்து வருவதாகவும் அந்த பக்தர் கூறினார்..சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரிக்குப் போனபோது, ஆச்சர்யத்தின் கிளைமேக்சுக்குப் போனேன். பொதுவாக இன்றைய கமர்ஷியல் மருத்துவ உலகில் ஒருவருக்கு நோய் என்று ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தால், அவரிடமிருந்து எவ்வளவு பணம் பறிக்கலாம் என்று ஆஸ்பத்திரிகள் கணக்குப் போடுவது சகஜம். ஆனால், சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிடி டாக்டர் ஒருவரிடம் பேசியபோது : எங்கள் ஆஸ்பத்திரிக்கு நோயாளி, நோயை மட்டும் கொண்டுவந்தால் போதும், பணம் தேவையில்லை" என்றார். பாபாவின் அறுபதாவது பிறந்தநாளின்போது ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனை இது. புறநோயாளிகளுக்கும், அக நோயாளிகளுக்கும் அருமையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த மருத்துவமனையில். நோயாளிகளில் கூட இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பாக்கியம் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்!.கல்கி சிறப்பிதழுக்காக பாபாவின் பொன்மொழிகள் புத்தகத்தைப் படித்து, சிலவற்றைத் தொகுத்துக் கொடுத்தேன். அவற்றில் அற்புதமான சில பொன் மொழிகள் இவை:.'தேன்' என்று சொன்னால் இனிக்காது; சுவைக்க வேண்டும்; 'சேவை' என்று சொன்னால் போதாது; செய்ய வேண்டும்.இல்லாததற்கு ஏங்காமல், உள்ளதைக் கொண்டு மனம் மகிழ்க!இன்றைய உலகம் அமைதியையும், அணுகுண்டையும் விரும்புகிறது! ஆனால், ஒன்று இருந்தால் ஒன்று மறைந்துவிடும்!இரும்பு நீருடன் சேர்ந்தால் துறு பிடிக்கும்; நெருப்புடன் சேர்ந்தால் தூய்மையாகும். நாமும் சேருமிடத்துக்கேற்ப மாறுவோம்.முதன் முதலில் சந்திர மண்டலத்துக்குப் போக உதவியது தன்னம்பிக்கை என்ற விண்கலமே.ஆயிரம் பருக்கைகளை அள்ளி உண்கிறோம். அதில் ஒரு கல் இருந்தாலும், அதையே பெரிதாய் சொல்கிறோம். ஆயிரம் இன்பங்களுக்கு இடையே வாழ்க்கையில் ஒரு துன்பம் வந்தாலும், வாழ்க்கையே அவதி என அலட்டிக் கொள்கிறோம்..புட்டபர்த்தியில் நான் சந்தித்து பேட்டிகண்ட ஒரு சுவாரசியமான மனிதர் அனில்குமார் காமராஜு. இவர், சத்யசாயி பல்கலைக்கழகத்தில் பயோ சயின்ஸ் துறை பேராசிரியர். நான் அவரை சந்தித்தது பயோசயின்ஸ் பற்றி பேசுவதற்காக இல்லை. அப்புறம்? பாபாவின் சொற்பொழிவுகள் பெரும்பாலும் தெலுங்கில்தான் இருக்கும். அவசியமானபோது அவற்றை, லைவ் ஆக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியை பல்லாண்டுகளாக செய்து வந்தவர் அவர்! பேரா. காமராஜுவை அவரது வீட்டில் சந்தித்து உரையாடினேன்.."பாபாவின் சொற்பொழிவுகளை மொழிபெயர்ப்பதில் என் பணி ஒலிப்பெருக்கியைப் போன்றதுதான். அதில் என் தனிப்பட்ட பங்களிப்பு ஏதுமில்லை; பாபாவே முதலில் தெலுங்கில் பேசிவிட்டு, அதன் பின் எனது உதடுகள் மூலமாக ஆங்கிலத்தில் பேசுவதாகவே நான் நினைக்கிறேன்! இருந்தாலும் அது எனக்குக் கிடைத்திருக்கும் பெரும் பாக்கியம். சில சமயங்களில் பகவானின் தெலுங்கு சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்கள் கிடைக்காமல் நான் தடுமாறும்போது, பகவானே மின்னல் போல எனக்கு சரியான வார்த்தைகளை எடுத்துக் கொடுப்பார்" என்று நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டார்.."முதல் தடவையாக மொழி பெயர்த்த அனுபவம் எப்படி இருந்தது?" என்று கேட்டபோது, "ஒரு முறை அவர் கொடைகானலுக்குச் சென்றிருந்தார். அங்கேதான் எனக்கு முதல் தடவை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று பாபாவின் தீவிர பக்தனான நான் ரொம்ப நெகிழ்ந்து போயிருந்தேன். லேசான பதட்டம் இருந்தது. அன்று பாபா பயன்படுத்திய சாதாரணமான "தெகி" என்ற தெலுங்கு வார்த்தைக்கு இணையான சொல் எனக்கு அந்தக் கணத்தில் கிடைக்கவில்லை. உடனே பாபா, "கட்" (வெட்டு) என்று எடுத்துக் கொடுத்தார். பகவானின் உரையைக் கேட்கும் பக்தர்களைப் போலவே, நானும் அவர் சொல்வதைக் கேட்கிறபோது உணர்ச்சிவசப்பட்டுப் போவேன். ஆனால், எனக்கு அதை மொழிபெயர்க்கும் பொறுப்பும் இருப்பதால், அந்த சிறு தடுமாற்றம் சில சமயங்களில் தவிர்க்க முடியாதது" என்று வெகு யதார்த்தமாகக் குறிப்பிட்டார்..அவர் சொன்ன ஒரு சுவையான சம்பவம்: ஒரு முறை நல்ல ஆங்கிலப் புலமை கொண்ட ஒரு அறிஞர் பாபாவை சந்தித்தார். அவரிடம் பாபா, " வாட் ஈஸ் லவ்?" என்று ஒரு கேள்வியைக் கேட்டார். ஆனால், அவரால் சட்டென்று அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், பாபாவே, "லவ் ஈஸ் செல்ஃப்லெஸ்னஸ்" என்று பதில் அளித்தார். அடுத்து, அவரிடம், " வாட் ஈஸ் செல்ஃப்?" என்ற கேள்வியைக் கேட்டார். அவரால் அந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. பாபாவே அதற்கும் விளக்கம் கொடுத்தார்:"ஸெல்ஃப் ஈஸ் லவ்லெஸ்னஸ்" எதற்காக இதை நான் குறிப்பிடுகிறேன் என்றால், பாபா, முறைப்படி கல்வி கற்றவர் இல்லை. ஆனால், அவரது ஆங்கில மொழிப்புலமை அபாரமானது..வழக்கம் போல, "உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்?" என்ற இதழியலின் புராதனகாலத்து கேள்வியையும் நான் அவரிடம் கேட்கத் தவறவில்லை. ஆனால், அவர் சொன்ன பதில் அருமை. 1975ஆம் வருடம், ரோட்டரி பவுண்டேஷன் சார்பில் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரை ஆறுவார கால பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு அனுப்ப இருந்தார்கள். நானும் அதற்கு விண்ணப்பித்திருந்தேன். நேர்முகத் தேர்வு நடந்தது. அதில் பலவிதமான கேள்விகளை என்னிடம் கேட்டார்கள். அத்தனை கேள்விகளுக்கும் டக் டக் என்றும், மிக விரிவாகவும் பதிலளித்தேன். இந்தியாவின் ஒரே பிரதிநிதியாக என்னை தேர்வு செய்தார்கள். ஆறு வார காலப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, நிறைய புது விஷயங்கள் கற்றுக் கொண்டு இந்தியா திரும்பினேன். தேர்வுக்குழுவினரது கேள்விகளுக்கெல்லாம் மிக சிறப்பாக நான் பதில் சொன்னதன் ரகசியம் என்ன தெரியுமா? அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நான் கேட்ட, மொழி பெயர்த்த பகவானின் சொற்பொழிவுகளிலேயே பதில்கள் இருந்ததுதான்!.விடைபெறும்போது அவர் சொன்ன வார்த்தைகள்: பகவானுடன் இருப்பதும், அவருக்குப் பணிபுரிவதும் ஒரு வகையில் நெருப்பில் இருப்பது போல, கத்தி மீது நடப்பது போன்ற சவால்தான்! வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பகவானுடனான நெருக்கத்தை பறைசாற்றிக் கொள்பவர்களுக்கும், அதை சுய லாபத்துக்கோ, வர்த்தக ரீதியிலோ பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு அங்கே இடமில்லை" (நம் ஊர் அரசியல் அல்லக்கைகளின் அலம்பல்களை நினைத்தபோது சிரிப்புதான் வருகிறது).புட்டபர்த்தி போய்வந்து, பாபா 75 சிறப்பிதழ் அமர்க்களமாக வெளியானது. இதழ் வெளியான வியாழன் அன்று மாலை ஒரு டெலிபோன் வந்தது. மறுமுனையில் ஆசிரியர் கல்கி ராஜேந்திரன் சாரின் மனைவி திருமதி விஜயா ராஜேந்திரன். "பாபா கல்கி படிச்சேன்! புட்டபர்த்திக்கே போய்விட்டு வந்து ரொம்ப நன்னா எழுதி இருக்கீங்க! பாபா அருள் உங்களுக்கு பரிபூரணமா கிடைக்கும்!" என்றார். அவரது வார்த்தைகளைக் கேட்க எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அடுத்து நடந்ததுதான் நான் சற்றும் எதிர்பாராதது. "அம்மா உங்ககிட்ட ரெண்டு வார்த்தை பேசணுமாம்!" என்று கூறினார். அடுத்து பேசியவர் எம்.எஸ். அம்மா. " பாபா ஸ்பெஷல் ரொம்ப நன்னா இருக்கு! எனக்கு பரமாச்சார்யாளும், பாபாவும் ரெண்டு கண்கள்!" என்றார் அந்த இசைப் பேரரசி. அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை சொல்ல இன்று வரை எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை..(தொடரும்)